* o هند திறம்) 59 உண்மையால் எளிதுஞ் சிறிதுமாயதைப் புறத்துச் சென்று தேர்தல் கூறிற்று, 'பள்ளச்செறுவிற் கயலுகளப்பழனக் கழனி யுட்புகுந்து, புள் ளுப்பிள்ளைக் கிரைதேரும் புள்ளம் பூதங்குடி (பெரிய திருமொழி) என்னும் பெரியார் திருவாக்கிற்போலக் கொள்க; இதன்கட் கயல்கள் உகளா விற்கவும் பிள்ளை வாயலகிற் கடங்காமையாற் கழனியினுள்ளே புகுந்து தாய்ப்புள் பிள்ளைப்புள்ளிற்கு இரைதேர்தல் கடறியது காண்க. "உரைசால்வண்புகழ்ப் பாரி பறம்பி னிரைபறைக் குரீஇயினங்காலப் போகி, முடங்குபுறச் செங்கெ றரீஇயரோராங், கிரைதேர் கொட்பின வாகிப் பொழுதிபடப் படர்கொண்மாலைப் படர்தந்தாங்கு (அகம் 303) என ஒளவையார் பாடுதலான் இதனுண்மை யுணர்க. சென்றிரை தேர் குரீஇயினம் வருமாலைப் பொழுதாதலும் உணர்க. துரீஇ-தேடி, தேர்க்காற்சுவட்டைத் தழுவிச் சென்று முல்லையார் தேர் பெற்றமுறை கண்டார். தேர் பெற்ற தகுதிக்கேற்ப முல்லையை உயர்திணையாற் கூறிற்று. 'முல்லைப் பிராட்டி' எனப் பெரியாரும் பணிப்பர், கண் டார் கருத்தாற் பன்மை இழிந்ததுபற்றி வந்ததும் ஆம் எளியரென நலிந்த வீ ர்ந்துளு' (திணைமாலை நூற்றைம்பது) என்புழி வேய்ங்குழ லினை உயர்திணைப் பன்மையாற் கூறியது கொண்டுணர்க. முறை என் பது கண்ட்ார்கருத்தால் முறையன்று என்பது படகின்றது. காட்டிற் புக்குத் தேரைக்கண்டும் பாரியைக் காளுமையால் மேய்புலம்புக்குக் தாய்ப்பசுவைக் காணுத இளங்கன்றை யொத்தவர் எ-று. தேர்ச்சுவடு பற்றிச் சென்ருநாகலிற் பாரியைக் கண்டிலர் என்க. (26) 85. இன்ன லறிந்தா லிருந்தே ரிலபோழ்திற் றன்னு நிறுவுந் தயாவுருக்கொண்-மன்னன் கொடைமடமீ தென்று குறிக்கொண்டு வந்தார் படைமடமி லாதபறம் பார். (இ-ன்.)-இருந்தே ரிலபோழ்கில் இன்னல் அறிந்தால், தன்னை யும் படர்கொம்பாக கிறுவற்குக் காரணமான அருள் வடிவுகொண்ட வேந்தன்; இதற்ைபாரி தன்னையும் தன்னதையும் பிறரின்னல் திர வழங்குவன் என்பது குறித்தது. இவ்வுண்மை மேலே சென்று தேற லாம். கொடைமடம் என்றது ஊரார் கருத்தால், கொடை மிகுத்த உள்ளத்தால் தாமும் தமமும் தன் அளவும் தெரியமாட்டாக பட்டமை இஃது என்க. கொடைமடம் வசைபோன்று புகழ் எனப்படும் என்ருர் பேராசிரியர் (தொல்.செய். 124) படைமடம்-சிகரல்லாதார் மேல் எழுதல்; மறந்திறம்பல் வலிய மெளுமனம், புறத்திறம்ப லெளியவர்ப் பொங்குதல்' (கிட்கி) எனக் கம்பாாடர் கூறுதலானும் உணர்க. (27)