43 சுவாமி.சிவாநந்தேஸ்வரர், தேவி-மலையரசியம்மை. சின் மயாநந்த தீர்த்தம், திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. பேபூர் :-கள்ளிக்கோட்டை தாலுகா, மலபார் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாவயம். - - பேரளம் :-மேற்படி தாலுகா, தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி, ரெயில் ஸ்டேஷன், சிவாலயம். சுவாமி-திரு முயற்சி நாதர், தேவி - செளந்தர நாயகி, வருணன் பூசித்த ஸ்தலம்-வைப்புஸ்தலம். இங்கு திருமயச் சோலிங்கர் கோயில் என்று ஒரு சிவாலயமுண்டு. சுவாமி. பரமேஸ்வரர், தேவி . மங்கள நாயகி, சரஸ்வதி தீர்த்தம். பிரம்மாவும், சரஸ்வதியும் பூசித்த கேத்திரம். பேரூர் :-கோயமுத்துனர் ஜில்லா, சென்னை ராஜ தானி, கோயமுத்தார் ஸ்டேஷனிலிருந்து 8 மைல், மேற்கு. இதற்கு பிப்பிலாரண்யம், தட்சிண கைலாசம், மேலைச் சிதம்பரம் என்றும் பெயர்கள் உண்டு. பரமசிவம், சுந்தர மூர்த்தியின் பொருட்டு, தாம் பறையனுகவும், உமா தேவி பற்ைச்சியாகவும் வேடம் பூண்டருளி, வயலில் நாற்று கட்டு திருவிளையாடல் புரிந்த கேஷத்திரம். பிரம்மாவும், விஷ்ணுவும் இங்கு பரமசிவத்தை கோமுனி, பட்டிமுனி எனும் உருவங்களில் பூசித்ததாக ஸ்தலபுராணம் கூறு கிறது. அன்றியும் காலவர், அதிமூர்க்கம்மன், காமதேனு பூசித்த ஸ்தலம். விஷ்ணு முதலியோருக்கு சபாநாதர் ஆகந்தத் தாண்டவமாடிய ஸ்தலம். சுயம்புவிங்கம்;சுவாமி. பட்டீசர், கோஷ்டீஸ்வரர், தேவி-பச்சை நாயகி, ம்ரகத வல்லி, பிரம தீர்த்தம், காஞ்சி நதி, கர்ஞ்சி நதி யென்பது நொய்யலாறு என்று வழங்கப்படுகிறது. நந்தி நேரா யிராது ஒரு புறமாயிருக்கிறது. இந்த ஸ்தலத்தில் பிறவாப் புளி இறவாப்பனே, விசேஷம். சுந்தரருக்காக சபாநாதர் அரசமரத்தடியில் கிர்த்தனம் செய்ததாக ஐதிகம். பிற வாப்புளி பெரிய கோயிலில் பெரிய கோபுர்த்திற் கருகி லுள்ளது. கோயிலில் பெரும்பாகமும், கோயிலுக்கு அருகிலுள்ள குளமும் மதுரை திருமலை நாயகருடைய சகோதரர் அளகாத்திரி நாயகரால் கட்டப்பட்டது. கோயிலின் பழைய பாகம் 11-ஆம் நூற்ருண்டில் ஆண்டி ராஜேந்திர தேவன் எனும் சோழ அரசனல் கட்டப்பட்ட