பக்கம்:The Knavery Of Kalappa.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 காளப்பன் கள்ளத்தனம் (அங்கம்-3 தேசத்து தோணியைக் கண்டதாகவும்-ஹா ஹா -தோணி யில் பலர் தங்களை அதைப் பார்வையிடும்படி அழைத்ததாக அம்-ஹா ஹா-அந்தத்தோணியின் தலைவன், தங்களுக்கு, சாப்பிடுவதற்குப் பலகாரம் எல்லாம் கொடுத்ததாகவும்அதை அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபொழுது-ஹா ஹா -தோணியை ஒட்டி விட்டதாகவும், பிறகு-அந்த துர்க்கி தேசத்தான்-தன்னை ஒறு சிறு படகில் போட்டு, கரைக்கு அனுப்பி, உடனே தன்னிடம் ஐந்தாறு பொன் அனுப்பாவிட்டால், அவருடைய மகனே, அரேபியா தேசத் துக்கு அடிமையாகக் கொண்டு போவதாகச் சொல்லியனுப்பிய தாகவும், அந்த லோபிக்குத் தெரிவித்தான். ஹா ஹா! இதைக் கேட்டவுடன்-இந்தப் பாம லோபி இடிவிழுக் தது போல் ஆகிவிட்டான்-ஒரு பக்கம் பிள்ளையின் பேரில் ஆசை, மற்ருெரு பக்கம் பணத்தின் பேரில் ஆசை இந்த மாதிரி இரண்டு பக்கமும் வலிக்கப் படவே என்ன செய்வான் பாவம் இந்த ஐந்நூறு பொன்னேக் கேட்டது அவனே ஐந்நூறு தரம் பிச்வாவால் குத்துவது போல் இருந்தது!-ஹாஹாஹா -இந்தப் பணத்தை விட் டுப் பிரிவதென்ருல், அவன் உயிரையே கொடுப்பது போலி ருந்தது. அதற்காக அந்தப் படுக்காளி எப்படியாவது பணம் கொடாதபடி தன்மைக்தனே மீட்க குத்த யுக்திகளெல்லாம் செய்து பார்த்தான்-ஹாஹாஹா -சமுத்திரத்தின் மீது அந்தத் தோணியை துரத்திக் கொண்டு போக போலிஸ் காாரை அனுப்புவதாயென்று யோசித்தான் !-ஹாஹா -அந்த வே இக்கானே ஜாமிகைப் போயிருக்கச் சொல்லி, பணம் கொடா தபடி தன் மைந்தனே மீட்டுக் கொள்ளப் பார்த்தான்!-ஹா ஹாஹா -முப்பது பொன் கூடப் பெருத, காலந்து பழங் துணிகளைக்கொடுத்து அவைகளைவிற்று அந்த ஐந்நூறு.பொன் னேக் கொடுத்து வரும்படி, வேலைக்கான அனுப்பப் பர்த் தான். ஹாஹாஹா இந்த மாதிரி ஒவ்வொரு பிரயத்னம் செய்யும் பொழுதும், அவனது வேலையாள்-இது அசாத்திய மான காரியம் என்று தெரிவிக்க-அதைப் பற்றி தனக்கு ஞாபகம் வரும்போதெல்லாம்-இந்தக் கழுதை அந்ததோணி, பண்ட்ை என் போளுன் அந்தத் தோணி பாழாய்ப் போக! அந்த துர்க்கி தேசத்தான் காசமாய்ப் போக!' என்று கூவிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/62&oldid=732182" இலிருந்து மீள்விக்கப்பட்டது