பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12.pdf/24

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

பெறுகின்ற கூலியோ வெறும் உதிர்ந்த பிட்டு “உழைப்புக்கு உணவு” என்ற தத்துவம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. பெற்ற கூலிக்கு ஏற்ற நியாயமான உழைப்பினை இறைவன் தரவில்லை. அதற்காகத் தண்டனையும் பெற்றுக் கொள்கின்றான். இது எதை நமக்குக் காட்டுகிறது? பெற்ற கூலிக்கு ஏற்ற நியாயமான உழைப்பினை யார் தர மறுத்தாலும் தண்டிக்கப்படுவார்கள். அவன் ஆண்டவனாய் இருந்தாலும் தண்டிக்கப்படுவான் என்ற அற்புதக் கருத்தைத்தான் இந்தக் திருக்கூத்து நமக்கு உணர்த்துகின்றது.

இங்கு ஒரு முரண்பாடு உண்டு. எதிர்நிலையாகக் காண்...