பதிற்றுப்பத்து/(புறத்திரட்டு, தொல்காப்பியஉரைகள்)
- பதிற்றுப்பத்தில் விட்டுப்போன, முதற்பத்தையோ பத்தாம் பத்தையோ சார்ந்த
- சில பகுதிகள் தொல்காப்பிய உரைகளாலும் புறத்திரட்டாலும் தெரிய வந்தன.
- அவை வருமாறு:
- இருங்கண் யானையொ(டு) அரும்கலம் துறுத்துப்
- பணிந்துவழி மொழிதல் அல்லது பகைவர்
- வணங்கார் ஆதல் யாவதோ மற்றே
- உரும்உடன்று சிலைத்தலின் விசும்(பு)அதிர்ந் தாங்குக்
- 5 கண்அதிர்பு முழங்கும் கடும்குரல் முரசமொடு
- கால்கிளர்ந் தன்ன ஊர்திக் கால்முளை
- எரிநிகழ்ந் தன்ன நிறைஅரும் சீற்றத்து
- நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
- நீர்துனைந் தன்ன செலவின்
- 10 நிலந்திரைப் பன்ன தானையோய் நினக்கே. (1)
- (புறத்திரட்டு, பகைவயிற்சேறல், 8; தொல். புறத். 6,
- இளம். 8; ந. மேற். அடி க:சீவக. 339, ந. மேற்.)
- இலங்கு தொடி மருப்பிற் கடாஅம் வார்ந்து
- நிலம்புடையூ எழுதரும் வலம்படு குஞ்சரம்
- எரிஅவிழ்ந் தன்ன விரிஉளை சூட்டிக்
- கால்கிளர்ந் தன்ன கடும்செல(வு) இவுளி
- 5 கோன்முனைக் கொடியினம் விரவா வல்லோ(டு)
- ஊன்வினை கடுக்குந் தோன்றல பெரி(து)எழுந்(து)
- அருவியின் ஒலிக்கும் வரிபுனை நெடுந்தேர்
- கண்வேட் டனவே முரசம் கண்உற்றுக்
- கதித்(து)எழு மாதிரம் கல்என ஒலிப்பக்
- 10 கறங்(கு)இசை வயிரொடு வலம்புரி ஆர்ப்ப
- நெடுமதில் நிரைஞாயில்
- கடிமிளைக் குண்டுகிடங்கின்
- மீப்புடை ஆர்அரண் காப்(பு)உடைத் தேஎம்
- நெஞ்சுபுகல் அழிந்து நிலைதளர்(பு) ஒரீஇ
- 15 ஒல்லா மன்னர் நடுங்க
- நல்ல மன்றஇவண் வீங்கிய செலவே. (2)
- (தொல். புறத். 12, 25, ந. மேற்.)
- பேணுதரு சிறப்பின் பெண்இயல்(பு) ஆயினும்
- என்னொடு புரையுநள் அல்லள்
- தன்னொடு புரையுநர்த் தான்அறி குநளே. (3)
- (தொல். கற்பு. 39, ந. மேற்.)
- வந்தனென் பெரும கண்டனென் செலற்கே
- களிறு கலிமான் தேரொடு சுரந்து
- நன்கலன் ஈயும் நகைசால் இருக்கை
- மாரி என்னாய் பனிஎன மடியாய்
- 5 பகைவெம் மையின் அசையா ஊக்கலை
- வேறுபுலத்(து) இறுத்த விறல்வெந் தானையொடு
- மாறா மைந்தர் மாறு நிலைதேய
- மைந்துமலி ஊக்கத்த கந்துகால் கீழ்ந்து
- கடாஅ யானை முழங்கும்
- 10 இடாஅ ஏணிநின் பாசறை யானே. (4)
- (புறத்திரட்டு, பாசறை. 8)
- ஒவிசயந் தப்பியஒ என்னும் பதிற்றுப்பத்து ஈகை
- கூறிற்று (5)
- (தொல். புறத். 20, ந. மேற்.)