பாஞ்சாலி சபதம்/33. சகுனியின் ஏச்சு

விக்கிமூலம் இலிருந்து
33. சகுனியின் ஏச்சு

கலகல வெனச்சிரித் தான் -- பழிக்
கவற்றையொர் சாத்திர மெனப்பயின் றோன்;
‘பலபல மொழிகுவ தேன்? -- உனைப்
பார்த்திவன் என்றெணி அழைத்துவிட்டேன்,
“நிலமுழு தாட்கொண் டாய் -- தனி்
நீ” எனப் பலர்சொலக் கேட்டதனால்,
சிலபொருள் விளையாட்டிற் -- செலுஞ்
செலவினுக் கழிகலை எனநினைந்தேன். 168

‘பாரத மண்டலத் தார் -- தங்கள்
பதிஒரு பிசுனனென் றறிவே னோ?
சோரமிங் கிதிலுண்டோ? -- தொழில்
சூதெனி லாடுநர் அரசரன்றோ?
மாரத வீரர்முன்னே, -- நடு
மண்டபத் தே, பட்டப் பகலினிலே,சூர சிகாமணியே, -- நின்றன்
சொத்தினைத் திருடுவ மெனுங்கருத் தோ? 169

‘அச்சமிங் கிதில்வேண்டா, -- விரைந்
தாடுவம் நெடும்பொழு தாயின தால்;
கச்சையொர் நாழிகை யா -- நல்ல
காயுடன் விரித்திங்கு கிடந்திடல் காண்!
பு{[மு-ப.]: ‘மண்டிலத்தார்’}

நிச்சயம் நீவெல் வாய்; -- வெற்றி
நினக்கியல் பாயின தறியா யோ?
நிச்சயம் நீவெல் வாய்; -- பல
நினைகுவ தேன்? களி தொடங்கு’கென்றான். 170