பாஞ்சாலி சபதம்/60. துரியோதனன் சொல்வது

விக்கிமூலம் இலிருந்து
60. துரியோதனன் சொல்வது

பாகன் உரைத்தது கேட்டனன் -- பெரும்
பாம்புக் கொடியவன் சொல்கிறான்: -- ‘அவன்
பாகன் அழைக்க வருகிலள்; -- இந்தப்
பையலும் வீமனை அஞ்சியே -- பல
வாகத் திகைப்புற்று நின்றனன்; -- இவன்
அச்சத்தைப் பின்பு குறைக்கிறேன், -- ‘தம்பீ!
போகக் கடவைஇப் போதங்கே; -- இங்க
பொற்றொடி யோடும் வருகநீ! 59