உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிதாசன் நாடகங்கள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

பாரதிதாசன்
நாடகங்கள்

பாவேந்தர்
பாரதிதாசன்




மணிவாசகர் பதிப்பகம்
55, லிங்கித்தெரு, சென்னை-600001.

முதற் பதிப்பு : 1991 — டிசம்பர், 11.
உரிமை : செறிவு
பதிப்பாசிரியர் :
டாக்டர் ச.மெய்யப்பன்
விலை ரூ.15.00


பதிப்புச் செம்மல்
டாக்டர் ச.மெய்யப்பன்


டாக்டர் ச.மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் துணைப்பேராசிரியர். திருக்குறள் இயக்கம், திருமுறைஇயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர். புலவர் குழு உறுப்பினர். பல்கலைக் கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார். இவர், தமிழ் நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார். பதின்னிரண்டு நூல்களின் ஆசிரியர். இவர் எழுதிய தாகூர் நூல் தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது. தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மல். துறை தோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களை வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். பதிப்புச் செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்.

கிடைக்குமிடம்:
மணிவாசகர் நூலகம்

12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001.
55, லிங்கித் தெரு, சென்னை-600 001.
28-A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001.
15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641 001.
28, கிளைவ்ஸ் கட்டிடம், திருச்சி - 620 002.


தொலைபேசி : சிதம்பரம் 2799 — சென்னை 513707

அச்சிட்டோர் : பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை 600 013

பாவேந்தர்
பாரதிதாசன்
(1891-1964)

நாடு போற்றும் நாடகங்கள்

முனைவர் ச. மெய்யப்பன்
அண்ணாமலைப்பல்கலைக் கழகம்


தலைமைச் சிறப்புகள் பல நிறைந்த தொல்காப்பியம் நாடக வழக்குப் பற்றிக் கூறுகிறது சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம். சிலப்பதிகாரத் தொடக்கம் நல்ல நாடகத் தொடக்கம். திருமுறைகள் முந்தமிழை ஆடல்நெறி, பாடல்நெறி என் அழகுற அமைத்துக் காட்டுகின்றன. கம்பநாடகம் ஓர் இலக்கியப் புதுமை, குறவஞ்சியிலும் பள்ளு இலக்கியங்களிலும் நளிசிறந்த நாடகக் கூறுகள் பல பொதிந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டில் சுந்தரனார் மனோன்மணியம் நாடகம் மூலம் நாடக மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். மனோன்மணியத் தமிழ்ந்தாய் வாழ்த்து தமிழியக்கத்திற்கு ஊற்றுக்கண்ணார் அமைந்துவிட்டது. நீண்ட நெடிய நாடக மரபினை உடைய தமிழுக்குப் பாவேந்தரின் நாடக ஆக்கங்கள் வளம் சேர்ப்பவை. பாவேந்தர் முத்தமிழறிஞர். பாடவும், நடிக்கவும் வல்ல பாவலர். பாட்டும் கூத்தும் பாவேந்தர்க்குக் கைவந்த கலைகள், புதுமையும் புரட்சியும் அவர் படைப்புகளின் தனிச்சிறப்புகள், பாமரரின் பல்கலைக்கழகமாய் அமைவன நாடகங்கள், வீடும் நாடும் நலம் பெறப் பாவேந்தர் நற்கருத்துகள் பலவற்றைத் தமிழ் நிலத்தில் தம் நாடகங்கள் மூலம் விதைத்துள்ளார். கவிதை கதை கட்டுரை, நாடகம் ஆகிய பல்வகை இலகிய வடிவங்களாலும் பாவேந்தர் முத்திரை பதித்துவினார். மிகப் புதிய அமைப்பில் பேசா நாடகமாரிய அமைதி என்னும் நாடகத்தைப் படைத்துத் தமிழ் நாடக வரலாற்றில் நிலைத்த இடத்தைப் பெற்று விட்டார். எதிர்காலத்தில் தமிழ் நாடகங்கள் வளம் பெறும் என்பதற்குப் பாவேந்தரின் படைப்புகள் முன்னோடியாய்த் திகழ்கின்றன. எதனையும் அழகாக எடுத்துரைப்பது பாவேந்தர் இயல்பு. நாடகங்கள் முழுவதும் நகைச்சுவை இழையோடுகிறது. பாவேந்தர் தம் படைப்புகளுக்கும் கதை மாந்தர்களுக்கும் இடும் பெயர்கள் தமிழ்நலம் கொழிப்பவை. நாடும்ஏடும் போற்றிப் பாராட்டத்தக்க வகையில் நல் நாடகங்கள் பலவற்றைப் படைத்த பாவேந்தரின் நாடக ஆற்ற அறிஞர் இளங்கோ திட்நுட்பத்துடன் ஆராய்ந்து முனைவர் பட்ட ஆய்வேட்டில் தக்க சான்றுகளுடன் ஆய்வு மதுகையுடன் நிறுவியுள்ள நிறம் நாடக ஆய்வுலகம் பெற்த பேறாகும். கருத்துக்களைக் கல அழகோடு நாடக உத்திகளுடன் நெந்த முறையில் பாவேந்தர் படைத்துள்ளார். பார்போற்றும் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் செம்பதிப்புகளாக வெளியிடுவதில் பெறுவுைம் பெருமிதழம் பேருவளையும் கொள்கிறோம்.


பாவேந்தர் பாரதிதாசன்
வாழ்க்கைக் குறிப்புகள்


1891 — ஏப்பிரல் 29, புதன் இரவு 10-15 மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை தாய் இலக்குமி.

1895 — ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் தொடக்கக் கல்வி. இளமையிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெறுதல்

1908 — முதுபெரும் புலவர் பு.அ. பெரியசாமியிடமும், பின்னர் புலவர் பங்காரு பக்தரிடமும், தமிழ் இலக்கண— இலக்கியங்களையும், சித்தாந்த வேதாந்தப் பாடங்களையும் கற்றல். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்பறல். புலவர் சுப்புரத்தினத்தை வேணு நாயகர் வீட்டு திருமணத்தில் பாரதியார் காணல். பாரதியாரின் எளிய தமிழ் சுப்புரத்தியாத்தைப் பற்றுதல்

1909 — காரைக்கால் சார்ந்த நிரவியில் அசிரியர் பணி ஏற்றல்.

1918 — பாரதியாரின் சாதி மதம் கருதா, தெளிந்த உறுதியான கருத்துக்களால் ஈப்புற்றுத் தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை தமிழக ஏடுகளில் கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என்ற பெயர்களில், பாடல், காதை, கட்டுரை, மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியார்க்கு உதவியும் உறுபொருள் கொடுத்தும் தோழனாய் இருத்தல்.

1919 — திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில் பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம்சாட்டி 1¼ ஆண்டு சிறை பிடித்த அரசு, விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் கவிஞர் வென்று பணியில் சேர்தல்.

1920 — இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல். புவனகிரியைச் சேர்ந்த பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனி அம்மையைத் திருமணம் செய்தல்.

1921 — பாரதியார் மறைவு (12-9-21)

1926 — ஸ்ரீமயிலம் சுப்ரமணியர் துதியமுது நூலை இயற்றல்.

1928 — நவம்பர் 3, கோபதி (மன்னர் மன்னன்) பிறப்பு.

1929 — ‘குடியரசு’, ’பகுத்தறிவு’ ஏடுகளில், பாடல், கட்டுரை, கதை எழுதுதல், குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே பாட்டெழுதிய முதல் பாவர்.

1930 — பாரதி, புதுவை வருகைக்கு முன்னும் பின்னும், பாடிய சிறுவர் சிறுமியர் தேசிய கீதம், தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு ஆகியவற்றை நூல் வடிவில் வெளியிடல். சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை வெளியிடல். டிசம்பர் 10இல் ‘புதுவை முரசு‘ கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.

1933 — மா. சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடந்த நாத்திகர் மாநாட்டின் பதிவேட்டில் ‘நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்‘ என்று எழுத்திக் கையெழுத்திடல்.

1934 — முழுநிலா இரவில் தோழர் ப. ஜீவானந்தம், குத்தூசி குருசாமி, குஞ்சிதிம், மயிலை சீனிவேங்கட சாமி, மாயூரம் நடராசடன், சாமி சிதம்பரனார், நாரண துரைக்கண்ணனுடன் படகில் மாமல்லபுரம் செல்லை. ‘மாவலிபுரச் செலவு‘ பாடல் பிறந்தது.

1935 — இந்தியாவில் முதல் பாட்டேடான — ‘ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்‘ தொடக்கம். இதற்கு உறுதுணையாக இருந்தவர் எஸ். ஆர். சுப்பிரமணியம்.

1937 — புரட்சிக்கவி — குறுங்காவியம் வெளியிடல்.

1938 — பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியைக் கடலூர் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி, நாராயணசாமி நாயுடு ஆகியோர் பொருள் உதவியால் வெளியிடுதல். பெரியார் ‘தன்மான இயக்கத்தின் சிறந்த பாவலர்‘ சான்று பாராட்டுதல்.

1941 — எதிர்பாராத முத்தம் (குறுங்காவியம்)

1942 — குடும்ப விளக்கு I வெளியிடுதல்.

1943 — பாண்டியன் பரிசு (காவியம்) வெளியிடல்.

1944 — இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல தீர்ப்பு நாடகம்), அழகின் சிரிப்பு ஆகிய நூல்களை ஒன்றன் பின் ஒன்றாய் வெளியிடல் குடும்ப விளக்கு II வெளியிடல். செட்டிநாடு

முழுவதும் இலக்கியச் சொற்பொழிவுகள் நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைதக் காலூன்றச் செய்தல்.

1945 — புதுவை, 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்குதல், தமிழியக்கம் (ஒரே இரவில் எழுதியது), எது இசை நூல்கள் வெளியீடல்.

1946 — ‘முல்லை’ இதழ் தொடங்கம். அமைதி — ஊமை நாடகம் வெளியிடல், (29.1.46) பாவேந்தர் ’புரட்சிக் கவி’ என்று போற்றப்பட்டு ரூ.25000 கொண்ட பொற்கிழியைப் பெறுதல். நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தல், அறிஞர் அண்ணா நிதி திரட்டித் தருதல்.

1947 — புதுக்கோட்டையிலிருந்து ‘குயில்’ 1, 2 மாத வெளியீடு. ‘சௌமியன்‘ நாடக நூல், பாரதிதாசன் ஆத்திசூடி வெளியிடுதல். சென்னையில் ‘குயில்‘, இசையமுது வெளியிடல்; புதுவையிலிருந்து ‘குயில்‘ இதழ் ஆசிரியர் — வெளியிடுபவர். கவிஞர் பேசுகிறார் (சொற்பொழிவு நூல்.)

1948 — காதலா கடமையா? (காவியம்), முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்), கடற்மேற்குமிழிகள் (காவியம்), குடும்ப விளக்கு III, திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட புதுக்கரடி நூல் வெளியிடல்.

1949 — பாரதிதாசன் கவிதைகள் 2 ஆம் தொகுதி, சேரதாண்டவம், தமிழச்சியின் கத்தி (குறுங்காவியம்), ஏற்றப்பாட்டு வெளியிடல்.

1950 — குடும்ப விளக்கு IV, குடும்ப விளக்கு V வெளியிடல்.

1951 — அமிழ்து எது? — கழைக்கூத்தியின் காதல் வெளியிடல்.

1954 — பொங்கல் வாழ்த்துக் குவியல் வெளிவரல், குளித்தலையில் ஆட்சிமொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல்.

1955 — புதுவைச் சட்டமன்றத் தேர்தல் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். பாரதிதாசன் கவிதைகள் — மூன்றாம் தொகுதி வெளியிடல்.

1955 — தேனருவி இசைப்பாடல்கள் வெளியீடல்.

1950 — தாயின் மேல் ஆணை: இளைஞர் இலக்கியம் வெளியிடல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல். ‘குயில்‘ கிழமை ஏடாக வெளிவருதல்.

1959 — பாரதிதாசன் நாடகங்கள், குறிஞ்சித் திட்டு வெளியிடல். ‘‘பிசிராந்தையார்’’ நாடகம் தொடர்தல், 1.11.50 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல்.

1961 — சென்னைக்குக் குடிபெயர்தல். பாண்டியன் பரிசு — திரைப்படம் எடுக்கத் திட்டமிடல். செக் நாட்டு அறிஞர் கமில் சுவலபில் செக் மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல்.

1962 — சென்னையில் மீண்டும் ‘குயில்’ கிழமை ஏடு (15.4.62). அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம். கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா வெளியிடல்.

1962 — மூதறிஞர் இராசாசி, தமிழ் எழுத்தாளர் சங்கச் சார்பில் பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல்.

1963 — பன்மணித்திரள் நூல் வெளியீடு. 72ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா.

1964 — பொது மருத்துவமனையில் ஏப்பிரல் 21இல் இயற்கை எய்துதல். மறுநாள் புதுவை கடற்கரையில் உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72 ஆண்டு, 11 மாதம், 28 நாள்.

1965 — ஏப்பிரல் 21. புதுவை கடற்கரை பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம், புதுவை நகராட்சியினரால் கட்டப்பெற்றது.

1968 — சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது, பாவேந்தரின் திருஉருவச்சிலை, மெரினா கடற்கரையில் திறந்து வைக்கப்பட்டது.

1969 — பிசிராந்தையார் நூல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்தல்.

1970 — மார்ச்சு, கவிஞரின் 'பிசிராந்தையார்' நாடக நூலுக்கு சாகித்திய அகாதமி ரூ.5000 பரிசு வழங்கியது.

1971 — ஏப்பிரல் 29இல் பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப்பெற்றது. ஆண்டு தோறும் அரசு விழா எடுக்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு 95-ஆம் எண் இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிக் கவிஞர் நினைவு நூலகம் நினைவகம் அருங்காட்சியகமாக கவிஞரின் ஆவணக் காப்பகமாகத் திகழ்கிறது.

1972 — ஏப்பிரல் 29, பாவேந்தரின் முழு உருவச்சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.


நானோர் பாவேந்தன்
பாரதிதாசனார் தம்மைப்பற்றி
இயற்றிய கவிதை



மிழி லக்கணம், தமிழி லக்கியம்
எனக்குச் சொல்லிக் கொடுத்தவர், புதுவைத்
திருப்புளி சாமி ஐயா, செந்தமிழ்
இருப்பே என்னும் பங்காரு பத்தர்,
புலவர்க்குப் புலமை ஈந்து நிலவு
பெரும்புகழ்ப் பெரிய சாமிப் பிள்ளை
என்பவர் ஆவார்.
இவர்களின் அருளினால்
பதினே ழாண்டும் பற்றா இளையேன்
நாற்பது புலவர் தேர்தலில் முதலாத்
தேர்வு பெற்றேன்.
காரைக் காலின்
ஒரு பகுதி யான “நிரவியில்” ஓர் இடம்
ஓர்ஆ சிரியர் தேவைஎன் றதனால்
அந்த இடத்தை அடையக் கருதிப்
புலவர் பல்லோர் போட்டி இட்டனர்.
யானும் பதினெட்டாண் டெய்தினேன். ஆயினும்
“இளையன் ஆதலால் அவன்அவ் விடத்தை
அடைதல் ஆகா தென்றனர்” ஆள்வோர்.
ஆயினும் நானே அதனை அடையச்
சட்டங் காட்டித் தடைகளை நீக்கி
அன்று எனை நிரவி ஆசிரியன் ஆக்கினார்.
அவர் யார்?
கல்வித் துறைச்செய லாளர்
பொய்இலா ராகிய “கையார்” என்க.
முப்பத் தேழாண் டலுவல் பார்த்தேன்.
ஓய்வு பெற்றேன் ஊதியப் பேற்றுடன்.
அலுவலில் இருந்த அத்தனை நாளிலும்
அறவழி தவறிய அதிகா ரிகளின்
எதிர்ப்பிலா நேரமே இல்லை; அக் கடலை
வென்று நீந்தா வேளையே இல்லை.
அலுவல் கால நிலைஇது.

ஆயினும்,
ஆசை பற்றிய தமிழின் தொண்டில்
ஒட்டிய என்உளம் வெட்டினும் பிரியாது.
வெண்பா முதலிய எழுதும் எனகை;
வண்ணம்பாடிக் கொண்டிருக் குமவாய்!
முப்ப தாண்டு முடியும் வரைக்கும்நான்
காழுதிய அனைத்தும என்ன சொல்லும்?
கடவுள் இதோஎன்று மக்கட்குக் காட்டிச்
“சுடச்சுட அவன் அருள் துய்ப்பீர்” என்னும்!
ஆயினும்,
கடவு ளுருவம் அனைத்தையும்
தடவிக் கொண்டுதான் இருந்ததென் நெஞ்சம்!
பாடலிற் பழமுறை பழநடை என்பதோர்
காடு முழுதும் கண்டபின கடைசியாய்ச்
சுப்பிர மணிய பாரதி தோன்றியென்
பாட்டுக்குப் புதுமுறை, புதுநடை காட்டினார்.

நானும் அவர்ககே எழுத்தியல் உதவுமோர்
தொண்டினால், அவர்க்கும், புலவர்க்கும் தோன்றும்
சண்டையில் வெற்றி கண்டிடச் செய்தேன்.
முட்புதர்க் களாப்பழம் அதனில் மொய்க்கும்
கட்புலம் போல என்றன் உள்ளம்,
சாதி என்பதோர் இடரைத் தவிர்த்தும்
சழக்கே என்பதோர் பெரும்படை தாக்கியும்
இளைஞர்க்குத் தமிழ்நலம் தந்து ஆசிரியர்
ஆக்குமோர் தொண்டினை நோக்கி நடந்தது.
நல்லா சிரியன்மார் நல்லா சிரியைமார்
பல்லோர் என்னிடம் பயின்றவர் இன்றும்
அலுவலில் அழகுற வாழ்கின் றார்கள்.
திலகர் செய்த உரிமைக் கிளர்ச்சியால்
கொலைமுதற் பற்பல குற்றம் சுமந்த
மாசிலா மனத்து மாட சாமியும்
அன்புறு பாரதி அரவிந் தர்முதல்
வன்முறை யுடையரால் வருந்துவார்க்கு உதவியாய்ப்
பன்முறைப் புதுவையில் செத்துப் பிழைத்தேன்.
மக்கள்நலம் காத்தல் கண்டுஆள வந்தார்
எக்கேடு சூழினும் அஞ்சேன்; ஒருநாள்
சிறைக்கதவு திறக்கப் பட்டது; சென்றேன்;
அறைக்கதவு புனிதப் பட்டது; மீண்டேன்.
புதுவை அரசியற் போரில் இறங்குவேன்;
இதைவை யேன்கானில் அதைவிட்டு வையேன்.

நாய்பல நாற்புறம் வாய்தி றக்கினும்
தாய்மொழித் தொண்டு தவறிய தில்லை.

நன்றி மறந்தவர் இன்று வரைக்கும்
குன்று கொணர்ந்து தூற்றுவர்: நன்றெனப்
பட்டதைச் செய்வேன்; பகைவருக்கு அஞ்சேன்.

வாய்ப்பு நேர்ந்த போதெல்லாம் பிறரைத்
தூக்கி விடுவதில் சோர்ந்ததே இல்லை.
படிப்புத் தந்தேன் சோறுதந் தேன்தலை
எடுக்கச் செய்தேன; என்தலை தனைஅவன்
அறுக்க முயன்ற போதும் சிரித்தேன்;
குறுக்கிற் பாய்ந்தும் பெரியவன் ஆகட்டும்
என்று நினைத்திருக் கின்றேன்; இன்றும்

என்கை பற்றி எழுந்து, பின் என்னையே
துன்பு றுத்தும் பிள்ளைகள் பற்றிய
கதைகள் பலஉள்.
தடைகள் கணக்கில.
கதையும் தாண்டி இந்நாள் எழுபதாம்
ஆண்டினை, ஈளைநோய் அங்காந்த வாயையும்
தாண்டி அடைந்தேன்; சாவு தோற்றது
மெய்யோ
ஆயினும் மெய்இலா உலகில்
என்னை இன்னும் வாழச் சொன்னார்
புலவர் இராம நாதன் அவர்கள்!
நானோர் பாவேந் தன்என் பதனை
நானிலத் தமிழர் நன்றே அறிவர்.

என்பாட்டுச் சுவையில் ஈடு பட்டவர்
நோக்கினால் நூற்றுக்கு நாற்ப தின்மர்
கான்நடை தம்நடை: என்யாப்புத் தம்யாப்பென்று
இந்நாள் எழுந்துள பாவலர் தம்மை
எண்ணினால், இருப்பவர் தம்மில் நூற்றுக்குத்
தொண்ணூற் றொன்பது பேர்எனச் சொல்லுவர்.

திரைப்படப் பாட்டும் பேச்சும் செய்பவர்
இருப்பிடம் என்றன நூற்களின் இருப்பிடம்!
அவரால் வெளிவந் துள்ள திரைப்படம்
என்நூற் சொல்லை மாற்றியது குறிப்பிடும்!
பழியே தவர்மேல்? என்நூல் அல்லது
வழியே தவர்க்கு? கற்பனை ஏது?
கட்சித் தலைவர்தம் கட்சிக் குழந்தையின்
தொட்டில் ஆட்டப் பாடிய பாட்டும்

வளர்க்கப் பாடி யந்த பாட்டும்
என்பாட் டாகும்! என்பாட் டுக்குப்
பின்பாட்டுப் பாடினேன் அதனைத் தன்பாட்டு
என்று இயம்பும்-இது குன்றின் விளக்காம்?
எனினும்,
நாட்டுப் பற்றுள நல்லவர்
மிகப்பலர் என்றன் பாட்டின் மேன்மையை
உணர்ந்து சிலசொல் உரைத்த துண்டு;
முட்டுக் கட்டை இட்ட தில்லை.
மற்றும்.
தமிழே உயிரென வாழும்
தோழர் சில்லோர் வாழ்வின் பயனென்
என்பாட் டுக்களை என்றன் நூல்களை
வரப் படுத்தி முறைப்படி வாய்விட்டு
வீட்டிலும் கூட்டந் தன்னிலும் மிக்க
ஒழுங்குறப் பாடு கின்றதும் உண்மையே.
ஒருநாள், ஓரிலக்கம் மக்கள் கூடிக்
கால்இ லக்கம் வெண்பொற் காசும்
பொன்னின் ஆடையும் ஈந்ததும் பொய்யன்று.
இவர்க ளன்றி மேல்நான் இயம்பிய
இழிந்தோர் என்னை ஒழிக்கத் தமிழையே
ஒழிக்கவும் தயங்கா உள்ளம் படைத்தவர்.
புலவர் இராம நாதன் அவர்கள்
தமது பெருந்தமிழ்ப் புலமையால் தாவி
என்றன் நூல்கள் அனைத்தையும் எடுத்துக்
“கவிஞரும் காதலும்” எனப்பெயர் கொடுத்துத்
திறனாய்வு வையம் காணச் செய்தார்.
நான்கா ணும் அவர் நல்ல எண்ணம்.
என்றன் எழுபதாம் ஆண்டின் பின்னும்
நன்றுநான் இன்பமாய் வாழ்வதற் கான
நோற்றலின் ஆற்றல் தருவதாம்!
வள்ளுவர்.
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கென் றருளினார்.
புலவர் இராம நாதனார் நூல்பல
உலகினுக் களித்துல குளவரை வாழ்கவே.

[1.3.60 ஆம் நாளன்று பாவேந்தர் எழுதிய இந்தப் பாடல், தஞ்சைப் புலவர் இராமநாதனார்க்கு வழங்கிய... வாழ்த்துருவில் நமக்குக் கிடைக்கப் பெற்றது!]

பாரதிதாசன் முன்னுரை

மிழர் மேன்மையைக் காட்டும் கருத்துக்கள் பல உருவங்களில் தோன்றித் தோன்றி நினைவைக் கவரிவதுண்டு! சும்மா இருந்துவிட முடிகின்றதா?

அவ்வப்போது எழுதி, கிடைத்த ஏட்டில் வெளியிட்டு வைத்தவைகளே இந்த நாடகங்கள்.

இப்போது நல்லதொரு வாய்ப்புக் கிடைத்தது அந்த நாடகங்கட்கு.

தமிழர்கள் ஆதரிக்க. இஃது என் விண்ணப்பம்.


பாரதிதாசன்

உள்ளுறை


1.
கற்கண்டு
(நகைச்சுவை நாடகம்)
...
1
2.
பொறுமை கடலினும் பெரிது
(நகைச்சுவை நாடகம்)
...
49
3.
இன்பக் கடல்
(காதுநுகர் நாடகம்)
...
64
4. 76

"https://ta.wikisource.org/w/index.php?title=பாரதிதாசன்_நாடகங்கள்&oldid=1811044" இலிருந்து மீள்விக்கப்பட்டது