உள்ளடக்கத்துக்குச் செல்

பூநாகம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

பூ நாகம்

சு. சமுத்திரம்

கங்கை புத்தக நிலையம்

பூ நாகம்
(சிறுகதைகள்)

சு. சமுத்திரம்


கங்கை புத்தகநிலையம்

13, தீனதயாளு தெரு,
தி. நகர், சென்னை – 600017

முதற் பதிப்பு : ஆகஸ்ட், 1993
உரிமை ஆசிரியருக்கு

விலை : 21 – 00

அச்சிட்டோர் :
ஜீவோதயம் அச்சகம்
65, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
சென்னை – 5.

சங்கநாத எழுத்தாளர்


“மனிதனுடைய கடவுள் மனிதனே
தான்”—20ஆம் நூற்றாண்டின் மராத்திய
இலக்கிய மறுமலர்ச்சி கர்த்தாக்களில்
ஒருவராகிய திரு. வி. ஸ. காண்டேகருடைய
மனித நேயக் கருத்து இது.

“மனிதனுடைய முன்னேற்றத்திற்கும்
எங்கே மனிதன் பாடுபடுகிறானோ அந்த
புனித இடம்தான்,”

நான் வணங்கும் கோயில்

நான் பிரார்த்திக்கும் கிறித்துவ
தேவாலயம்

தொழுகின்ற இஸ்லாமிய
“பள்ளி வாசல்”.

மனிதனுடைய விடுதலைக்கும்
விமோசனத்துக்கும் தன்னை முழுமையாக
அர்ப்பணித்துக் கொண்ட நவஇந்தியாவின்
சிற்பி நேருஜியினுடைய வாசகங்கள்
இவை.

மனித நேயம் இறுக்கமான அழுத்தமான
மனித பாசம் இந்த இரண்டு
மேற்கோள்களிலும் மேலோங்கி
யிருக்கிறது, மின்னுகிறது.

புத்தனிலிருந்து அண்மையில்மறைந்த
சின்மயானந்தா ஸ்வாமிகள் வரை
வலியுறுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிற
மிகவும் எளிதான, அதே நேரத்தில்
மனிதனை தேவனாக்கும் அரிய பண்புதான்
மனித நேயம் என்பது, மனித நேயத்தின்

விரிவான பரிணாமம் சமூகப் பிரக்ஞை
என்பார்கள்.

இந்த இரண்டு பண்புகளும், சொல்லோடு
செயலோடு ஓடும் இரத்தத்தில் ஒவ்வொரு
‘செல்’லோடும் இலட்சிய பூர்வமாக
கலந்துவிட்ட காட்சியைத்தான்
எழுத்தாள நண்பர் திரு. சு. சமுத்திரம்
அவர்களிடத்தில் அவருடைய மாணவப்
பருவத்திலிருந்தே நான் கண்டு வியந்த
பெருமைப்பட்ட அருங்குணமாகும்.

அமெரிக்கப் பெரும் கவிஞன் வால்ட்
விட்மேன் ஒரு இடத்திலே குறிப்பிடுகிறார்:
“இதை (அவருடைய புத்தகத்தை)
தொடுபவன் ஒரு மனிதனைத் தொடுகிறான்”
என்பதை உணரட்டும்.—
“Any one who touches this touches a
Man”

திரு. சமுத்திரம் அவர்களுடைய
உயிரோட்டமான படைப்புகள் எதுவாக
இருந்தாலும் என்னுள் இயல்பாக
எழுகின்ற உணர்வு இது தான். மனிதனை
பல கோணங்களில் பார்க்கிறார். அவனைப்
பற்றி பீடித்திருக்கின்ற அழுக்கு இழுக்கு
அவ மரியாதைகளை துடைத்தெறிய சிறு
கதை இலக்கியத்தை ஒரு போர்க் கருவியாக
உபயோகிக்கிறார். அவனோடு
சேர்ந்து அவனுடைய குற்றமற்ற மகிழ்ச்சியில்
திளைக்கிறார் சிரிக்கிறார். அவனோடு
சேர்ந்து அழுகிறார். தன்னையே
வறுத்திவதைத்துக் கொள்கிறார்—
அவருடைய எழுத்துக்களை உணர்வு பூர்வமாக
படித்தவர்கள் இதை உணர்வார்கள்.

மனிதனுக்காக மட்டும்தானா அவர்
அழுகிறார், அங்கலாய்க்கிறார்? இந்த
கதைத் தொகுப்பில் ஒரு அற்ப காகத்தினுடைய
அவல நிலைக்காக அவர் அல்லலுறுவதை
முதல் கதையில் “இரையும் இறையும்”
உணர முடியும். காக்கையின் ஆன்மாவைப்
பற்றி இந்த இளம் சித்தர் விளக்குகிறார்.

மற்ற கதைகளும் இதயத்திற்குக்
குளிர்ச்சியும், அறிவிற்குக் கூர்மையும்,
உணர்வுகளுக்கு உத்வேகத்தையும்,
பார்வைக்கு தெளிவையும் தெம்பையும்
கொடுக்கின்றன.

உளமாற சகோதர பாசத்தோடு
சாகித்திய அகாடமி பரிசு பெற்ற இந்த
சங்கநாத எழுத்தாளரை மேன் மேலும்
செழித்து கொழித்து சிறப்படைய
வேண்டுகிறேன்.

இது நீண்ட நெடிய நட்பின் உந்துதல்
அல்ல. உயிரோட்டமான மனிதநேய மிக்க
எழுத்துக்களுக்கு தன்னடக்கத்துடன்
நான் அர்ப்பணிக்கின்ற காணிக்கையாகும்.


பகத்சிங்
(தேசிய முழக்கம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பூநாகம்&oldid=1864533" இலிருந்து மீள்விக்கப்பட்டது