மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/கற்றல் நன்றே!

விக்கிமூலம் இலிருந்து

74. கற்றல் நன்றே!

ஆசிரியனுக்கு ஏற்படும் துன்பத்தைத் துடைக்க வேண்டும். வேண்டும் பொருளை விரைந்து கொடுக்க வேண்டும் அடங்கிக் கல்வி கற்றல் நல்லது. ஏன்? தாய் தன் வயிற்றிற் பிறந்த மக்களுள் கற்ற மகனையே விரும்புவாள்!

ஒரு குடியிற் பிறந்தவர்களுள், மூத்தவன் வருக என்று அழைக்காமல், கல்வி கற்றவன் வருக என்றே அவையினர் அழைப்பர் அறிவுடையோன் சென்ற வழியே அரசனும் செல்வான்.

நால்வகை சாதியாரில் மேல்சாதிக்காரர், கற்றிலராயின் தாழ்ந்தவராகி கெடுவர் கீழ்ப்பட்ட ஒருவன் கல்விகற்றிருப்பின், அவனை மேல் சாதிக்காரனும் வணங்குவான்.