மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/புகழ் மூடும் தாழி!

விக்கிமூலம் இலிருந்து

99. புகழ் மூடும் தாழி

வளவன் இறந்துபட்டான் அவன் பூதவுடலைத் தாழியுள் வைத்து மூடினர். ஐயூர் முடவனார் இதை நேரிற் கண்டார். அவர், தாழி செய்து கொடுத்த குயவனைக் கூப்பிட்டார்.

“கலஞ் செய்வோனே! வளவன் பூதவுடம்பை மறைக்கும் தாழியைச் செய்துவிட்டாய். ஆனால், அவன் புகழ்உம்பை மூடும் தாழியைச் செய்ய உன்னால் இயலுமோ?

அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

உலகையே திகிரியாக்கி, களிமண்ணாக்கி குழைத்து, ஒரு தாழி செய்ய வேண்டும். முடியுமா உன்னால்” என்று கேட்டார் ஐயூர் முடவனார்.