முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
நா. ராமச்சந்திரன்
முற்போக்கு இலக்கிய
இயக்கங்கள்
தொ. மு. சி. ரகுநாதன்
பொன்னீலன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
41 - பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
சென்னை - 600098.
- MURPOKKU ILAKKIYA IYAKKANGAL
by
T.M.C. RAGUNATHAN
PONNEELAN
- MURPOKKU ILAKKIYA IYAKKANGAL
- முதற் பதிப்பு : செப்டம்பர், 1994
© நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சென்னை - 600098
- முதற் பதிப்பு : செப்டம்பர், 1994
- Code No. A761
- விலை ரூபாய்: 15-00
- ISBN : 81 - 234 - 0311 - 9
- கண்ணப்பா ஆர்ட் பிரிண்டர்ஸ்
60/4, சூரப்ப முதலி தெரு,
திருவல்லிக்கேணி,
சென்னை – 600005.
தொலைபேசி: 842910
- கண்ணப்பா ஆர்ட் பிரிண்டர்ஸ்
ஒளி அச்சு : ஈசுவர் லேசர், சென்னை - 18.
பதிப்புரை
தமிழக முற்போக்கு கலை இலக்கியத்தின் அரை நூற்றான்டு (1940 - 1990) வரலாறு குறித்து 1990 செப்டம்பர் 29, 30 தேதிகளில் திருநெல்வேலியில் நியூ செஞ்சுரி வாசகர் பேரவை கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
‘அரை நூற்றாண்டு வரலாறு’ பற்றி தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் ஆற்றிய ‘வழிகாட்டி உரை’யும், ‘சுதந்திரத்தமிழகத்தின் கலை இலக்கியங்கள்’ பற்றி பொன்னீலன் அவர்கள் ஆற்றிய உரையும் இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன.
முற்போக்கு இலக்கியம் என்பதற்கு எப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்பதும் தமிழ் நாட்டில் முற்போக்கு இலக்கியம் முளைக்கத் தொடங்கிய காலம், விதம், அதன் பின்னணி, சோதனை, சாதனை, வேதனை, தவறுகள் ஆகியவை பற்றியும் சுயவிமர்சன ரீதியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மனந்திறந்து பேசி, மக்கள் முன் ஓர் ஆரோக்கியமான விவாதத்தைத் தூண்ட வேண்டும் என்ற நோக்கம் தொ. மு. சி.யின் முன்னுரையிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோசலிச எதார்த்தவாதம் என்றால் என்ன? இதன் வரலாறு என்ன? என்பது பற்றியும், சோசலிச எதார்த்தவாதத்திற்கு, எப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
‘வாழ்க்கையிலிருந்து கோட்பாட்டை வடித்தெடுப்பதற்குப் பதிலாக, கோட்பாட்டை வைத்துக் கொண்டு வாழ்க்கையை வடித்துக் காட்ட முயன்ற போக்கு’ பற்றி தொ.மு.சி. அவர்கள் உதாரணத்தோடு விளக்கம் அளித்துள்ளார்.
வாணிப நோக்கம் மலிந்துவிட்ட, கலை இலக்கியத்தைக் கொச்சைப்படுத்தும் துறையாக மாறியுள்ள சூழ்நிலையில், கொள்கைப் பிடிப்போடு சாதித்தவைகளில் எதார்த்தவாதம், விமர்சன எதார்த்தவாதம், ஜனநாயக மனிதாபிமானம், சோசலிச எதார்த்த வாதம் என்பனவற்றுள் சிலவற்றை தொ.மு. சி. அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
‘எந்த ஒரு எழுத்தாளனுக்கும் ஒரு தத்துவ அடிப்படை இருக்கத்தான் வேண்டும். அதனைத் தேர்ந்து தெளிந்து உருவாக்கிக் கொள்வது அவனது பொறுப்பு, தத்துவம் என்பது வழிகாட்டிதான், கைவிலங்கல்ல தத்துவத்தின் மீது குருட்டுப் பக்தி கொண்டு அதற்கு அடிமைப்பட்டுவிட்டால், பிறகு வாய்ப்பாட்டுச் சூத்திரங்களை வைத்துக் கொண்டு எதையும் அளந்து பார்த்து ஏமாறும் நிலைதான் ஏற்படும். அப்போது அந்தத் தத்துவம் அந்தப் படைப்பாளிக்குத் தேக்க நிலையைத் தான் உருவாக்கும்’ என்ற விளக்கத்தோடு தொ.மு.சி. அவர்கள் வழிகாட்டுகின்றார்.
முற்போக்கு இலக்கியம் என வரையறை செய்வதற்கு மனிதாபிமானம் அல்லது மனிதநேயம் தான் அடிப்படை அளவுகோலாக இருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை வலியுறுத்திக் கூறும் அதே வேளையில், மனிதாபிமானம் என்பதை நாம் எவ்வாறு அர்த்தப்படுத்த வேண்டும் என்பதையும் மிக முக்கியமானதாகக் குறிப்பிடுகின்றார் தொ. மு. சி.
‘சுதந்திர தமிழகத்தில் கலை இலக்கியங்கள்’ பற்றி பொன்னீலன் அவர்கள் குறிப்பிடும் போது, மன்னர்கள் காலம் தொடங்கி இன்றுவரை இலக்கிய அமைப்புகள் எவ்வாறு இருந்து வந்துள்ளன என்பது பற்றி விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
‘பொருளாதாரத்தில் சோசலிசமும், அரசியலில் ஜனநாயகமும் மனித குலம் மேலும் புதிதாகப் பரிணமிப்பதற்காகவே’ பண்பாட்டுத் தளத்தில் மனித நேயம் பொங்கிப் பெருகுவதற்காகவே சோசலிசம் வேண்டும் என்கிறோம். எனவே பொங்கிப் பீறிடும் பண்பாட்டுப் பெருவெள்ளமோ சரியான வடிகால் இன்றி கண்டபடி பாய்ந்து கொண்டிருக்கிறது. இவற்றைக் கரைகட்டி ஒழுங்குபடுத்தாவிட்டால் அது காட்டாறாகக் கரைபுரண்டு பேரழிவினை விளைவிக்கும்.
இதை எல்லாப் பண்பாட்டு அமைப்புகளின் முன்னோடிகளும் உணரவேண்டும் என்று பொன்னீலன் தனது ஆழமான கருத்தை வலியுறுத்துகிறார்.
இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள இரண்டு தலைப்புகளும், கருத்தரங்கு உரையாக இருந்தபோதிலும், இந்நூல் வாசகர்களுக்கு ஓர் ஆய்வு நூலாகப் பயன்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
பதிப்பகத்தார்.
பொருளடக்கம்
பக்கம்
| | 1-71
|
| | 72-104
|
