விடுதலை வீரர்கள் ஐவர்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
கழக வெளியீடு : க௩உச
விடுதலை வீரர்கள் ஐவர்
✽
தமிழகப் பொதுப்பணி அமைச்சர்
கலைஞர் மு கருணாநிதி
அவர்கள் தலைமையில்
திருச்சி வானொலியில் 13-8-67 இல்
நடைபெற்ற கவியரங்கில்
கவிஞர்கள் ஐவர் வழங்கிய கவிதைகள்
✽
திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
திருநெல்வேலி-6. சென்னை -1.
1968
THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS
©
PUBLISHING SOCIETY, TINNEVELLY, LIMITED.
Ed 1 MAY 1968
V21y7xM9
K8
VIDUTHALAI VEERARKAL AIVAR
Appar Achakam, Madras-1 (1-2)
நாட்டு விடுதலைக் குழைத்த வீரர்களின் வரலாறுகளை மக்களிடையே பரப்பி, அதன்மூலம் மேலும் பல ஆற்றல் மிக்கவர்கள் தோன்றுமாறு செய்தல் அறிவுடையோர் கடன். அவ்வகையில் நல்லறிஞர் பலர் எழுதிய விடுதலை வீரர்களின் வரலாறுகளை நம் கழகம் முன்னரே வெளியிட்டுள்ளது.
இத்தகைய வரலாறுகள் உரைநடையில் மட்டுமன்றி உணர்ச்சியூட்டத்தக்க கவிதைகளாகவும் அமையுமாயின் அவை மிக்க பயன் தருவனவாகும் என்பது எமது எண்ணம்.
அண்மையில் திருச்சி வானொலி நிலையத்தில் கட்டபொம்மன், மருது பாண்டியன், பாரதியார், வ. வே. சு. ஐயர், வ. உ. சிதம்பரனார் ஆகிய தமிழகத்தின் தலைசிறந்த விடுதலை வீரர் ஐவரின் வரலாறுகள் பற்றிய கவியரங்கம் நடைபெற்றது. தமிழகப் பொதுப்பணி அமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியவர்கள் அக்கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கிச் சிறப்புற நடத்தினார்.
முறையே கவிஞர்கள் விடுதலை வீரர்களின் வரலாறுகளைத் தமக்கேயுரித்தான மிடுக்கு நடையில் இனிய - எளிய தமிழில் கவிதை மாரி பொழிந்துள்ளனர். கவிஞர்களை அறிமுகப்படுத்து முறையிலும், வரலாறுகட்குத் தோற்றுவாய் செய்யு முறையிலும் கலைஞர் கருணாநிதியவர்கள் தமது தலைமை உரையைக் கவிதையாகவே பொழிந்துள்ளது அனைவரும் வியந்து பாராட்டத்தக்கது.
இத்தகு சீரிய கருத்தரங்கினை வானொலி மூலம் கேட்டு மகிழ்ந்த யாம் இதனைத் தொகுத்து நல்லதொரு நூல்வடிவாக்கின் இது நாட்டு மக்கட்குப் பெரிதும் பயன்படும் நூலாய் அமையும் எனக் கருதினோம்
எமது விழைவினைக் கலைஞர் கருணாநிதி அவர்கட்கும் பிற கவிஞர்கட்கும் தெரியப்படுத்தினோம். கலைஞர் அவர்களும், கவிஞர்கள் திருச்சிற்றம்பலக் கவிராயர், திரு. தி. கு.நடராசன், எம்.ஏ.. பி.டி., கவிஞர் முருகு சுந்தரம், திரு.அப்துல் ரகுமான், புலவர் திரு. இளஞ்செழியன் ஆகியோரும் மனமுவந்து எமது கருத்துக்கு இசைவு தெரிவித்தனர். அவர்கட்குத் தனித்தனியே எமது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
இக் கவியரங்க நிகழ்ச்சிகளைத் தொகுத்து வெளியிட இசைவு தந்த திருச்சி வானொலி நிலையத்தார்க்கு என்றும் எமது நன்றி உரித்தாகும்.
வானொலியில் நிகழ்ந்த இக்கவியரங்கம் நடமாடும் கவியரங்கமாகத் திகழ இந்நால் பயன்படுமெனக் கருதுகிறோம். தமிழக மாந்தர் இதனை ஏற்கப் போற்றிச் சுவையும் பயனும் பெற்று மகிழ்வார்களாக. இதனைத் தொடர்ந்து இவ்வரிசையில் வரவிருக்கும் கவிதை நால்களைத் தமிழன்பர்கள் வரவேற்றுப் போற்றுவார்களென நம்புகிறோம்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்
தமிழகப் பொதுப்பணி அமைச்சர்
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி
அரசியல் உலகில் அறிஞர் அண்ணா அவர்களின் அருமைத் தம்பியர்களுள் ஒருவரெனக் கருதப்படும் கலைஞர் மு. கருணாநிதியவர்கள் 1924 இல், திருவாரூரிற் பிறந்தார். மாவட்டக் கழக உயர் நிலைப் பள்ளியில் பள்ளி யிறுதிவரை பயின்றார். இளமையிலேயே மொழிப்பற்று - நாட்டுப்பற்று - இனப்பற்று மிக்குடையோராய்த் திகழ்ந்தார். பெரியார் அவர்களையும், அறிஞர் அண்ணா அவர்களையும் தமக்கு வழிகாட்டியாகக் கொண்டு முறையே சமுதாய சீர்திருத்தம் அரசியல் ஆகிய துறைகளில் அயராது பாடுபட்டார். இந்தி எதிர்ப்பு, கல்லக்குடிப் போராட்டம், விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்டம் எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டுப் பலமுறை சிறை ஒறுப்புக்களுக்கு ஆட்பட்டு இவர் பட்ட இன்னல்கள் அளப்பில.
பேச்சாற்றல், எழுத்தாற்றல், கவிதைபுனையும் ஆற்றல், நடிப்பாற்றல் ஆகியன ஒருங்கே கைவரப் பெற்ற இவரைத் தமிழகம் கலைஞர் என அழைத்தது மிகை அன்று. இவர் எழுதிய நாடகங்களும், திரைப்பட வசனங்களும் கலையுலகில் பெரும் புரட்சியை உண்டு பண்ணின.
தி. மு. கழகம் தேர்தலில் ஈடுபட்ட நாள் முதல், அஃதாவது 1957 முதல் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து வாகை சூடிய இவர், இன்றைய தமிழக அமைச்சவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பொருந்தும் பணி ஆற்றி வருகிறார். அத்துடன், தி. மு. கழகப் பொருளாளராகவும், கழகக் காவலர்களுள் தலையாயவராகவும் இருந்து இவர் ஆற்றிவரும் அரும்பணிகள் பல. ‘முரசொலி’ மூலம் இவர்தம் பணிச் சிறப்புக்களை நன்கறியலாம்.
விடுதலை வீரர்கள் பற்றிய கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கி இவர் தரும் கவிதை நலம் கண்டு களிப்போமாக.
இவர் தம் இயற்பெயர் இரகுநாதன் என்பது. இவர் 20-10-1923 இல் திருநெல்வேலியில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்து இந்துக் கல்லூரியில் பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், அரசியலில் பற்றுக் கொண்டார். அதனால் கல்லூரிப் படிப்பை இழக்க நேர்ந்தது. தமிழ் இலக்கியங்களை விரும்பிப் படித்தார். எழுத்தாற்றல் பேச்சாற்றல்கள் கைவரப் பெற்ற இவர், சில காலம் 'தின மணி' இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அக்காலத்திற்றான் இவர்தம் எழுத்தாற்றல் வெளிப்படலாயிற்று. கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் பல இவரால் இயற்றப்பட்டு மக்கள் மன்றத்தில் சிறப்புப் பெறலாயின. திரு, இரகுநாதன் அவர்கள் 1945 இல் திருச்சிற்றம்பலக் கவிராயர் என்னும் புனை பெயரில் பல கவிதைகளை எழுதலானார். இவர் தம் கவிதைகள் நாட்டுப்பற்று, மொழிப் பற்று மிக்கு மிளிர்ந்தன. 'ரகுநாதன் கவிதைகள்' 'கவியரங்கக் கவிதைகள்' ஆகிய நூல்கள் இதற்குச் சான்று பகர்வனவாகும்.
மேலும் திரு. இரகுநாதன் அவர்கள் நாவல்கள், சிறுகதைகள், மொழி பெயர்ப்புக்கள் ஆக்குவதில் அருந்திறல் பெற்றவர். இவர் தமிழில் எழுதிய நாவல்கள் சிறுகதைகள் சில ரஷிய, செக், போலிஷ், ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1946 முதல் 1956 வரை 'முல்லை,' 'சக்தி' 'சாந்தி' ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராகவிருந்து தமிழ்ப்பணி ஆற்றி வருகிறார். 1967இல் 'சோவியத் நாடு' அனைத்திந்திய நேரு நினைவுப் பரிசை முதன் முறையாகப் பெற்ற தமிழர் இவர். ஈண்டுக் கட்ட பொம்மன் வரலாற்றைக் கவினுறத் தருகின்றார்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருவானைக்கா என்னும் ஊரில் புலவர் தி. சி. குழந்தைவேலனார்-பாக்கியலட்சுமி அம்மையார் ஆகியோரின் அருமைத் திருமகனாராகத் தோன்றியவர் திரு. நடராசன்.
இளமையிலேயே மொழிப்பற்றும், கல்வியில் ஆர்வமும் கொண்டு, கவிதைபாடும் திறனும் வாய்ந்து காணப்பட்டார். முறைப்படி தமிழ் பயின்று புலவர் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1961 இல் எம்.ஏ. தேர்விலும் 1962 இல் பி.டி., தேர்விலும் அங்ஙனமே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
பொதுப் பணிகளில் நாட்ட மிக உடைய இவர் இருபதுக்கு மேற்பட்ட கழகங்களிலும் மன்றங்களிலும் பங்கு கொண்டு பணியாற்றி வருகிறார்.
வேலூர் (சேலம்) கந்தசாமிக் கண்டர் கல்லுாரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் இவர், தமிழ் நாடு, தின மணி, சுதேசமித்திரன், தமிழ்ச் செல்வி, குயில், தென்றல், முத்தாரம், முரசொலி, சைவமணி, திராவிடன், திராவிடநாடு மற்றும் பல இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். ஈழ நாட்டு ஏடுகளிலும் இவருடைய கவிதைகள் வெளிவந்துள்ளன. திருச்சி வானொலி நிலையத்தில் இரண்டு முறை மொழி பெயர்ப்புப் பாடல்களை வழங்கியுள்ளார். இவருக்குக் 'குமுதன்' என்னும் புனை பெயருமுண்டு. ஈண்டு மருது பாண்டியன் வரலாற்றினை வண்ணத் தமிழ் ஓவியமாக -- கவினுறு கவிதையாகத் தருகிறார்.
கவிஞர் (முருகு சுந்தரம் அவர்கள் திருச்செங்கோட்டில் 30.12. 1930 இல் முருகேசன் - பாவாய் அம்மை ஆகியோரின் திருமகனாராகத் தோன்றியவர். முறைப்படி கல்வி பயின்று தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் (எம்.ஏ.) பட்டம் பெற்றார். தமிழ் மொழியிடமும், தமிழ் அறிஞரிடமும் மிகுந்த பற்றுடையவர். சென்னையில் கல்லூரி மாணவராக இருந்தபோது பாவேந்தர் பாரதிதாசனாரின் தொடர்பு இவருக்கு ஏற்பட்டது. பாவேந்தரிடம் சில காலம் மாணவராக இருந்து பாடங் கேட்டார். திரு முருகு சுந்தரம் அவர்களின் கவிதை ஆற்றலுக்குப் பாவேந்தர் முக்கிய காரணரானார் எனல் பொருத்தும்.
இவரது கவிதைபுனையும் ஆற்றலுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. பாரதியார் வரலாறு.
திரு. அப்துல் ரகுமான் 9-11-1937இல் பாண்டிய நாட்டில் மதுரை நகரில் பிறந்தார். இவர்தம் தந்தையாரும் நூல் இயற்றும் வல்லமை கைவரப் பெற்றவர். 'மஹதி' என்ற புனை பெயரில் பல நூல்கள் எழுதியுள்ளார். தந்தை எப்படி மைந்தன் அப்படி என்பதற்கேற்ப, திரு, ரகுமானும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். இளங்கலை வகுப்பில் பயின்றகாலை மாநில முதன்மைக்காகப் பல்கலைக் கழகம் அளித்த ஜி. யு. போப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். கல்லூரியில் பயிலும்போதே ஏடுகளில் கவிதை, சிறுகதை, கட்டுரைகள் எழுதி வந்தார், இவற்றில் பல பரிசுகளும் பெற்றிருக்கிறார். கவியரங்குகளில் பங்கேற்று அரிய கவிதைகளை அவ்வப்போது வழங்கி வருகிறார். தற்போது வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். ஈண்டு வ. வே. சு. ஐயர் வரலாற்றினை அழகு தமிழில் -இனிய கவிதையாகத் தருகின்றார்.
இவர் 1938-ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தைச் சேர்ந்த பெருவளப்பூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். தந்தையார் பெயர் அருணாசலம்; அன்னையார் பெயர் வெள்ளையம்மாள்.
டால்மியாபுரம் உயர் நிலைப் பள்ளியில் கல்விபயின்று பள்ளி யிறுதிப் படிப்பை முடித்தார். பின்னர்க் கரந்தைப் புலவர் கல்லூரியில் சேர்ந்து பயின்று புலவரானார். பேச்சாற்றல், எழுத்தாற்றல், கவிதைபுனையும் ஆற்றல் ஆகியன ஒருங்கே கைவரப் பெற்ற இவர் தி. மு. கழகத்தின்பால் பற்றுக் கொண்டு அரசியல் பணியாற்றத் தொடங்கினார். தி. மு. கழக அரசியல் மேடைகளில் பேசுவதிலும் அரசியல், சமுதாயம் பற்றிக் கவிதைகளை எழுதுவதிலும் இவர் ஆர்வத்தோடு ஈடுபடலானார்.
தமது ஆற்றல்கட்கேற்ற பணி ஏடெழுதும் பணியே எனவும் அதுவும் தி. மு. கழகச் சார்புடைத்தாய் இருத்தலே சாலச் சிறந்த தெனவும் துணிந்த இவர் 1962 இல் - 'போர்க்குரல்' என்னும் தி. மு. க. கிழமை இதழ் ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் தமது அறிவாற்றல்கட்கு ஆக்கம் தேடினார்.
பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓரங்க நாடகப் போட்டி ஆகியவற்றில் கலந்து கொள்வதில் இவர்க்கு ஆர்வம் மிகுதி. கல்வி பயிலும் காலத்தில் இத்தகு போட்டிகளில் கலந்து கொண்டு இவர் முதற் பரிசுகளைப் பெற்றுள்ளார். இத்தகைய கவிஞர் தமிழகம் தந்த விடுதலை வீரர்கள் ஐவருள் வ. உ. சிதம்பரனார் அவர்களின் வரலாற்றினை ஈண்டுக் கவிதை வடிவில் தருகின்றார்.
உள்ளுறை
பக்கம்
| | 3 |
—மாண்புமிகு தமிழகப் பொதுப்பணி அமைச்சர்
கலைஞர் மு. கருணாநிதி
| ௧. | 5 |
| | 14 |
| ௨. | 15 |
தி. கு. நடராசன். எம்.ஏ. பி.டி.
| | 22 |
| ௩. | 23 |
கவிஞர் முருகுசுந்தரம்
| | 36 |
| ௪. | 37 |
திரு. அப்துல் ரகுமான்
| | 46 |
| ௫. | 47 |
புலவர் திரு. இளஞ்செழியன்
| | 61 |



