சென்னை மாநில நிதி. கல்வியமைச்சர்
உயர்திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் அளித்த
உயரிய விஞ்ஞானக் கருத்துக்களைத் தமிழில் சொல்ல முடியுமா? இதற்கு விடையளிக்கும் முறையில் திரு. சுப்பு ரெட்டியார் “அணுவின் ஆக்கம்” என்ற நூலே எழுதி முடித்திருக்கிறார். அணுவைப்பற்றிய அறிவு இன்றைக்கு விஞ்ஞானத் துறையின் சிகரமாக விளங்குகிறது. இந்த அறிவின் காரணமாக உலகில் பல்வேறுவித புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட்டு வருவதை நாம் காண்கின்றோம்.
‘சடம் வேறு, சக்தி வேறு’ என்பது முன்னாளைய விஞ்ஞானத் தத்துவம். பிரபஞ்ச முழுவதும் சக்தி மயம் என்ற வாதம் அறிவுக்கு எட்டாதது மட்டுமல்ல, ஒவ்வாதது என்று விஞ்ஞானப் பேரறிஞர்கள் கருதினர். ஆனால், இன்று சடமும் சக்தியும் ஒன்றே என்பதை விஞ்ஞானமே நிரூபித்துக் காண்பிக்கின்றது.
அத்துடன் அணு சக்தியைக்கொண்டு பல்வேறு துறைகளில்-தொழில்துறை, விவசாயத்துறை, மருத்துவத்துறை நாம் இதுவரையில் எதிர்பாராத பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுவருவதை இன்று காண்கின்றோம்,
அணு அறிவைப்பற்றிய அரிய கருத்துக்களைச் சாதாரண மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் இந்நூல் எழுதப்பெற்றிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. புதிய புதிய விஞ்ஞானப் பதங்களைக் கையாண்டிருப்பது தமிழுக்குப் புதியதொரு வளத்தைக் கொடுக்கின்றது.
மாணவர்களுக்கும் பெரியோர்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படக்கூடியது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
சென்னை.
22.7.58