பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

3


அந்த உண்மை, ஓர் ஒளிச்சுடர் போன்று என்னுள் ஒளிவிட்டு உணர்த்தியது எனக்கு இயேசுவே அவ் வகையான 'புத்தன்பு' கொணர்ந்தார். ஆனால் இரு சொற்களும் பயன்படுத்தமால் பரிமாற்றம் செய்யப்படாமல் இருப்பதைக் கண்டேன். அந்தக் கமுக்கம் என்னில் உள்ளது. அந்தக் கமுக்கத்தின் வெளிப்பாடு என்னை என்கிறீர்களா?

"அன்பின் வழியது உயிர்நிலை" என்றார் திருவள்ளுவர் !

"அன்புதான் கடவுள்" என்கிறார் யோவான்!

எல்லாரும் வாருங்கள், இறைவரின் வரம்பிகந்த தெய்வீக இயல்பினில் நிலைபேறுடைய வாழ்வில் ஒருங்குகூடிப் பங்கு கொள்வோம்; பங்கு கொண்டால் நாம் எல்லாம் கடவுளின் அன்புப் பிள்ளைகள் ஆவோம்.



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/7&oldid=1515201" இலிருந்து மீள்விக்கப்பட்டது