பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43


ஒளவையார் புன்னகை பூத்தவாறே, "அப்படியா? பாட்டுத்தானே வேண்டும்? இதோ பாடுகிறேன்” என்று சொல்லிப் பாட்டைச் சொல்ல ஆரம்பித்தார்.

உடன் இருந்தவர்களுக்கெல்லாம் தூக்கி வாரிப் போட்டது. 'இது என்ன! உண்மையாகவா இந்தத் தமிழ்ப் பெருமாட்டியார் இவனைப் பாடப் போகிறார்?" என்று ஒருவரை ஒருவர் தம் பார்வையாலே கேட்டுக் கொண்டனர்.

ஒளவையார் உண்மையிலேயே ஒரு பாட்டைச் சொன்னார். அதில் அவருடைய சாதுரியம் நன்றாக விளங்கியது.

திருத்தங்கி வளர்க்கும் வாழையையும் மருத்தனர் வீட்டு வாழையையும் பற்றி அவர் பாடினார். எப்படிப் பாடினார்? அதுதான் சுவையான செய்தி.

'இந்தத் திருத்தங்கியின் வாழை எங்கே? அந்த மருத்தனுடைய வாழை எங்கே? மருத்தனுடைய வாழை வளர்ந்து பூத்துக் காய்த்துப் பழுத்துத் தேன் சொட்டச் சொட்ட நிற்கிறது. மருத்தனுடைய வாழையோ!அதை என் னவென்று சொல்கிறது? வாழையாகவா தோற்றமளிக்கிறது? மரம் இருக்கிறதே ஒழிய, இலை இல்லை: பூவே இல்லை; காய் எங்கே இருக்கப் போகிறது? குருத்தைக்கூட அல்லவா மொட்டையாக்கிவிட்டான்?' இப்படி விரிவாக எண்ணும்படி பாட்டு வந்தது.

திருத்தங்கி தன்வாமை தேம்பழுத்து நிற்கும்

என்று வெண்பா ஆரம்பமாயிற்று. அதைக் கேட்ட அந்த உலோபி மனம் மகிழ்ந்தார். 'பாட்டின் தொடக்கத்திலேயே நம்புகழை வைத்துவிட்டார்’ என்று களித்தார். மேலே பாட்டு வளர்ந்தது.

மருத்தன் திருக்குடகதை வாழை-குருத்தும்
இலையும்இல பூவும் இலே காயும்இலை