பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்




ஆடிப்பாடி, தமிழரைப் பிடித்த தீங்கை எல்லாம் சாடித் தனித் தொளிர்ந்தாள்.

அறிஞர் அண்ணா கையில் பலவேறு கருத்துாற்று மழையூற்றாய் பெருக்கெடுக்கையில், மக்களின் பழகு தமிழும் திரு.வி.க.வின் அழகு தமிழும், கதை - கட்டுரை - கவிதை - நாடகம், புதினம், பேச்சு பலக் கோணங்களில் முத்தமிழும் எத்திசையும் புகழ் மணக்க குற்றால அருவியாய் சொற்கோலம் பூண்டது.

புள்ளிசையின் தெள்ளிய திரட்சியும் புதுவெள்ளம் போன்ற அள்ளிசைப் புள்ளாய் குறையாத அமுதசுரபியாக, புத்தெண்ணங்களின் புரட்சியும், அவர் நடையில் அழகிய மயிலாட்டமும் கொண்டன.

கார்கால முகில் மூட்டத்தின் முழக்கமும் கொட்டின. புரட்சிக் கவிஞரிடத்தில் கவிதை நடையின் வீச்சும், வீறும் முதன்மை பெற்றது. பெரியாரின் பத்தெண்ணங்களின் புயலாகவும், காட்டாறாகவும் பொழிந்தது - அவர் தமிழ் நடை.

தன்மான இயக்கத்தில் அறிஞர் அண்ணாவின் நடையைப் பின் பற்றியோர் பலர். அன்ன நடை நடக்கப் போய் உள்ள நடையும் இழந்தார்கள். தமிழ் பேராசிரியர்களில் எண்ணப் பொலிவு, நடைப் பொலிவு இரண்டிலும் திரு.வி.க., வளவன், பாட்டியனார், ம.இல. தங்கப்பா இவர்களைத்தான் குறிப்பிட முடியும். மற்றவர்கள் தொன்னூறு விழுக்காடு தன்னறிவற்ற சொத்தைகளே!

அறிஞர் அண்ணாவின் சமகாலத்தவருள் கா.ஸ்ரீ.ஸ்ரீ, வே.சாமிநாத சர்மா, ஜீவா, ஜெயகாந்தன் போன்றவர்களே தமிழின் வளமையில் ஆழங்கால் பட்டு, பைந்தமிழின் பன்முகங்களின் நளிநயத்தை செம்மாந்த சிந்தனைகளை எவ்வெவ்வாறெல்லாம் காட்ட முடியும் என்று காட்டியவர்கள்.

தன்மான இயக்கத்தில் அண்ணாவுக்குப் பிறகு, பாங்குடைய தமிழை, ஒங்கிய எண்ணங்களுடன் எழுதத் தெரிந்தவர் எனக்குத் தெரிந்தவரை தோழர் புலவர் என்.வி. கலைமணி ஒருவரே. கலைமணி நிலைமணியாய் நெஞ்சினில் உற்றதை நேர்பட உரைப்பதில் கிஞ்சித்தும் அஞ்சாதவர்.

20