பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


அவர் காலத்தில், கிறிஸ்துவம், என்ற புல், பூண்டுகள் தோன்ற -ஏசு நாதர் என்ற மழையே பெய்யவில்லை.

கால வளர்ச்சியின் பரிணாமம் புரியாத சில மத வெறியர்கள், இன்றையத் திருவள்ளுவராண்டுக் கணக்கை விளக்கொளியாக ஏந்திக் கொண்டு - 'திருவள்ளுவர் கிறித்துவரா?' என்று கேட்டு, தமது மத அரிப்புக்கு இதமாக சொறிந்து கொள்கிறார்கள்.

காலொடிந்து போன அந்த நொண்டிகள், வணிகன் ஏலேலசிங்கனையும், பாதிரி தோமாசையும் இரு மரக்கட்டைகளைக் கால்களாக்கிக் கொண்டு, மதச் சடுகுடு ஆடிப் பார்க்கிறார்கள்.

காலக் காற்றின் முன்பு ஆலாய் பறக்கும் அந்தக் கருத்துக்கு 'அமெரிக்கப் பணம்' ஆலவட்டம் வீசுகிறது.

தமிழை இலக்கண வழுவறக் கற்று, திருக்குறளை எழுத்தெண்ணி ஆழ்ந்து படித்து, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப் என்ற மேனாட்டுத் தமிழ் மாணவர்!

ஆங்கிலத்தில், திருக்குறள்போல் ஒரு நூல் இல்லையே, உலகப் புலவர்கள் யாரும் இன்றுவரை இப்படியொரு நூல் இயற்றிட முயற்சி கூடச் செய்யவில்லையே என்பதற்காக, திரு. போப் அவர்கள், அழுக்காற்றில் நீந்துகின்ற அரவமாக மாறவில்லை.

திரு.போப், கிறிததுவக் கூட்டுக்குள் அய்யன் திருவள்ளுவரை அடைத்துக் கோயில் கட்ட விரும்பவில்லை.

காரணம், அவர் தேர்ந்த சிந்தனையாளர்! வழுவிலா ஆய்வாளர் திறன் மிக்க எழுத்தாளர்!

நஞ்சுண்டு சேய் காக்கும் தாயைப் போல, கடும் இன்னல் தளையுண்டு உலகத் தலைமுறைகளுக்கு உயிரறிவு காக்க, பொய்யகற்றி, புதுமையேற்றி, வையகமே வாழ்த்தும் அறிவுச் செல்வங்களை அவர் வழங்கினார்.

அத்தகைய மேதைகூட, அய்யன் திருவள்ளுவரைக் கிறித்துவர் தான் என்று, உறுதியை அறுதியிட்டுக் இறுதியாகக் கூறவில்லை.

"அடக்கம், அறம், பாவ மன்னிப்பு என்பன கிறிஸ்துவ

38