பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


புனிதத்தினால் அச்சடிக்கப்பட்ட பைபிள் வாசகங்கள், புரையோடிய ஒரு சமுதாயத்திற்கு மருந்தாகப் பயன்படுகிறது என்பது உண்மை!

அந்த மருந்திலே, நஞ்சைக் கலப்பவர்களை எப்படி மக்கள் மன்னிப்பார்கள்.

அவர்களின் தீவிர மதவாத வெறி, நாட்டிலே மதப் பிளவு மேடு பள்ளங்களை மீண்டும் உருவாக்காதா?

அய்யன் திருவள்ளுவர் நூல் எழுதத் தொடங்கியபோது, கிறித்துவம், இசுலாம், சீக்கியம் என்ற மதங்களின் கர்த்தாக்கள், அவரவர் தாய் வயிற்றிலே சூல் பெறாத காலம்!

"யூதம், கன்பூசியம், பார்சியம் என்ற மதங்கள் திருவள்ளுவர் காலத்திற்கு முன்பே பிறந்தவை. அவை தமிழ் நாட்டிற்குள் அடியெடுத்து வைக்காத நேரம் - அதாவது கி.மு. காலம்.

இன்று நம்மிடையே ஆல் போல தழைத்துள்ள சைவம் வைணவ சமயங்கள், மிகப் பழமை வாய்ந்தனவே ஆயினும், இப்போதுள்ள நிலையில் அய்யன் திருவள்ளுவர் காலத்தில் சிறிதும் இருந்தில.

அய்யன் திருவள்ளுவருக்குப் பின்னரே, நாயன்மார்களும் - ஆழ்வார்களும் தோன்றி, இந்நாளில் நிலவும் நிலையிற், சைவ - வைணவ சமையங்களைப் பல்லாற்றானும் பரப்பி வளர்த்தருளினர்.

அய்யன் திருவள்ளுவர் காலத்தில், உலகாயுதம், வைதிகம், சமணம், பெளத்தம் எனும் சமயங்கள் மட்டுமே, தமிழகத்தில் பரவியிருந்தன எனத் தெரிகிறது"

புலவர் த. ரா. முருகவேள், எம்ஏ, எம்.ஓ.எல். - திருவள்ளுவர் உடன்படாத கொள்கைகள் சில” (திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டு )

எனவே, அய்யன் திருவள்ளுவர் நூல் எழுத முற்பட்டபோது, உலக மதங்களின் பரிணாம வளர்ச்சி இது என்றால், "திருவள்ளுவர் கிறித்துவரா?" என்று கேட்பது மதக் கிறுக்கே தவிர, அறிவுச் செருக்கென்று எப்படி ஏற்பர் அறிஞர்!

அவர் காலத்தில் இருந்த மதவாதிகளின் கூரிய வாள், அய்யன்

திருவள்ளுவரது எழுத்தின் மீது விழ ஆரம்பித்தபோது,

40