பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


தொங்கவிட்டு - விளக்கம் கூறி வீழ்ந்தே போனார்!

இடையிலே ஒருவர் பெளத்தர் என்றார்! பன்றிக் கறியைத் தின்று பேதியாகிச் செத்தார் புத்தர் என்பர் மேனாட்டார்!

தனது மதத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கு, செத்த இறைச்சியைத் தின்றிட அவர் உரிமையும் தந்தார்! அதனால், புத்தர் என்று கூறியவரும், பாவம் வீழ்ந்தார்!

இசுலாமியத்தைச் சேர்ந்தவர் அவரை முஸ்லிம் என்றார். திருக்குறள் என்ற பெயரிலே உள்ள 'ள்' என்ற எழுத்தை நீக்கி, 'ன்' என்ற எழுத்தைக் கூட்டிச் சிலருக்கு விளக்கம் உரைத்து." திருக்குரான்தான் திருக்குறள்” என்று தோள் தட்டி ஆடினார்!

மேலை நாட்டு மேதைகள், திருவள்ளுவர் கருத்தைப் படித்து மெய் சிலிர்த்து, அவரை ஒரு கிறித்துவர் என்றே கூறலாம், என மன நிறைவு மட்டுமே அடைந்தனர்!

ஆனால், கிறித்துவ மத வெறியர்கள் சிலர், 'திருவள்ளுவர் கிறித்துவரா?' என்ற வினாவைத் தொடுத்து, தமிழ் அறிஞர்கள் முப்பத்தெட்டு பேரை அழைத்து, சென்னை மாநகரிலே, கருத்தாய்வு விவாதப் போட்டி மாநாட்டு விழா ஒன்றை மே, 3, 4, 1952ம் ஆண்டு நடத்தினார்கள்!

அந்த விழாவிற்குத் தலைமை வகித்த பெரும்புலவர் ஞா. தேவநேயப் பாவாணர் என்ற சிரம் பழுத்த கிறித்துவர், திருவள்ளுவர் காலம் கி.மு. மூன்றாம்.நூற்றாண்டு என்று கூறி, விழா எடுத்தவர்களின் முகத்தைத் தொங்க வைத்தார்!

மதவெறி பிடித்த ஒவ்வொருவரும், அய்யன் திருவள்ளுவரை அவரவர் மதக் கோட்பாட்டிற்குள்ளே அடக்கிட பெரு முயற்சி எடுத்துத் தோற்றார்கள் - இந்த இருபதாம் நூற்றாண்டில்!

எந்த நூற்றாண்டானாலும் சரி, தமிழ்ச் சமுதாயம, ஒன்றை மட்டும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பொருள், ஏதாவது ஒன்றினுள் அடங்கி விட்டால், அது இன்னொரு பொருளில் அடங்காது.

அய்யன் திருவள்ளுவர், சைவ எல்லையுள் சிக்கிக் கொண்டு விட்டால், வைணவ எல்லையில் அவரைப் பார்க்க முடியாது.

46