பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


இந்த நூலில் யார் யாரைப் பற்றியெல்லாம் அவர் எழுதியிருக்கிறாரோ, அத்துணைபேரும் கொடுத்து வைத்தவர்கள் என்று நான் கூசாமல் கூறுவேன்

வாழ்க்கை நெறிகளைச் சொல்லிப்போன வள்ளுவன், காந்தி, மார்ட்டின் லூதர் கிங் போன்று - சமூக அவலங்கள் கண்டு அனலாய்ப் பொங்கி, நெருப்புத் துண்டுகளாய்ப் பாடல்களை யாத்து-உணர்ச்சியற்ற மரத்துப்போன தோள்களுக்தெல்லாம் சூடும் சொரனையும் ஏற்படுத்திய-பாரதி, பாரதிதாசன் போன்ற மகா கவிகளையும்

திரு..கலைமணி அவர்கள் கட்டிக் காட்டும்போது, கலை மணி அவர்களே - இன்னொரு மகா கவியாக மலருகிறார்.

தமிழ் அர்த்தமுள்ள மொழி என்பதை - சில நூல்களைப் படிக்கும் போது நாம் அறியலாம்.

தமிழ் - அழகான மொழி என்பதை, சில கவிதைகளைப் படிக்கும் போது நாம் உணரலாம்.

ஆனால் - தமிழ் மொழி-அர்த்தமும் அழகும் வாய்க்கப் பெற்ற அபூர்வமான, ஆழமான மொழி என்பதை -

நண்பர் கலைமணியின் இந்த 'அய்யன் திருவள்ளுவர்' என்னும் நூல் துலாம்பரமாகக் காட்டுகிறது.

நான் வரிக்கு வரி, ரசித்து, ரசித்து வாசித்தேன். நீங்களும் அவ்வாறு வாசித்து அனுபவிக்க வேண்டும் என்பது என் ஆசை.

புலவர் பெருந்தகை திரு. என்.வி. கலைமணியின் எழுத்துத் திறனை நுண்மான் நுழை புலத்தை - நான் கட்டிக் காட்டத் தேவையில்லை.

ஆதவனைச் சுட்டிக் காட்ட அகல்விளக்கு வேண்டுமா என்ன?

கலைமணியே சூரிய வெளிச்சமாக வாசகர்மேல் படருகிறார். அனைவருக்கும் தம் எழுதுகோலால் அறிவு வெளிச்சம் கொளுத்துகிறார். வாழ்க என் நண்பர்!

-வாலி



29–1–2000

12. முதல் தெரு, கற்பகம் அவின்யூ,

இராசா அண்ணாமலைபுரம், சென்னை - 600 028.

6