பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
"I ENVY -
N.V. Kalaimani."
காவியக் கவிஞர் வாலி

கொண்டையா - ராஜூவும் -
கோபுலுவும் -
வரைந்த தெல்லாம்
வர்த்தகச் சந்தையிலே
கிடைக்கும் - கவின்மிகு
கடைச் சித்திரங்கள்!
வி.ச. காண்டேகரும்
வ.ரா.வும் -
வரைந்த தெல்லாம்
வாசக சாலையில்
கிடைக்கும் - கருத்துமிகு
நடைச் சித்திரங்கள்!
ஆனால்....
என் இனிய நண்பர் -
எழுத் தோவியர் -
என்.வி. கலைமணி
எழில் கொஞ்ச வரைந்திருப்பது
கடைச் சித்திரமுமல்ல;
நடைச் சித்திரமுமல்ல.
தன் -
நூல் வகைகளையே
நால்வகைச் சேனைகளாய்க் கொண்டு..
தமிழர்களுக்காக - ஒரு
தங்கத் தலைவன் நடத்திய
தர்ம யுத்தம் பற்றிய
படைச் சித்திரம்!