பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12


தென் பொதிகையில்
தோன்றி...
புலவர்கள்
நெய்தளித்த
'நூல்' புடவைகளை
உடுத்தி -
உலகெலாம்
உலா வந்த
பூந்தமிழ் அன்னை.
வேட்டியும்
சட்டையும்
மேல் துண்டும்
அணிந்து -
அழகுமிகு காஞ்சியில்
ஆண் மகனாய்
அவதரித்தாள்!

அந்நாள் வரை
அனைவர்க்கும்
அன்னையா யிருந்தவள்.
ஆடவனாய்ப் பிறந்ததால்
அனைவர்க்கும்
'அண்ணா ஆனாள்!
அண்ணாவாகப் பிறந்த
அருந்தமிழை
அஞ்சலி செய்வதால்.....
இந்த நூல்
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
எனும்
பெயரை
ஏற்று இலங்குகிறது.
அடியேன் -