பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அறிவியல் திருவள்ளுவம்

தம் அறிவுப் பெருமிதத்தையோ, அருள் பெருமிதத். தையோ பேசுபவர் யாம்' என்றே பேசுவர்.

“யாம் அவண் நின்றும் வருதும்”[1]

“இஃது யாம் இரந்த பரிசிலல்”[2]

“யாம் இரப்பவை பொன்னும் பொருளும்
போகமும் அல்ல”[3]

“படையமை மறவரும் உடையம் யாம்”[4]

இவை போன்றவை பெருமிதம் காட்டுபவை. இப்பெருமிதப் பொருளைவிட,

கண்ணகி
“என் காற்சிலம்பு” என்று கூற
மன்னன் பாண்டியன்,

“யாம் உடைச்சிலம்பு”[5] என்றான். இந்த “யாம்” அரசுப் பேருமிதம். இக்காலத்து இதனை ஆங்கிலத்தில் (Royal We) என்பர்.


  1. கடியலூர் உருத்திரங்கண்ணனார் :
    பெரும்பாணா: 28
  2. கபிலர் : புறம் : 110-2
  3. கடுவன் இளவெயினனார் : பரி : 7-18, 19
  4. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் : புறம் : 72-5
  5. இளங்கோவடிகள் : சிலம்பு : வழக்குரை-67,69