பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

அந்தத் தேவையை உணர்ந்து, கவிஞர்கோ கோவை, இளஞ்சேரனார் நூல்கள் படைக்க முனைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. அவருடைய முனைப்பில் இப்போது உருபெற்றிருக்கும் அறிவியல் திருவள்ளுவம்' என்கிற ஆய்வு நூலைப் படித்து மிக மகிழ்ந்தேன். அரசாண்மை யில், வானவியல், மருத்துவம், உளப்பகுப் பாய்வியல், பொருளாதாரம், வேளாண்மை யியல் உள்ளிட்ட பல்வேறுதுறைச் செயற்பாடுகளில் இன்றைய மனித இனம் கண்டறிந்துள்ளஸனவற்றைக் திருக்குறள் குறிப்புகளுடன் தக்கவாறு பொருத்தி ஆய்ந்திருப்பதைக் கண்டு வியக்கிறேன்.

தமிழர்தம் வளர்ச்சியின் தேவையறிந்து இந்நூலின் வாயிலாக, கவிஞர் இளஞ்சேரனார் திருக்குறளை ஒர் அறிவிய நூலாக அடையாளம் காட்டியுள்ளார். இந்தப் புதிய பார்வையின் அடிப்படையில் அவருடைல் ஆய்வுப்பணியும், எழுத்துப்பணியும் தொடர பயில்பவர் உலகம் அவருக்கு ஊக்கமளிக்க வேண்டும். அவருக்கு என் வாழ்த்துக்கள்.


சென்னை-600005
திசம்பர்-23, 1994

அன்பன்,
ப. க. பொன்னுசாமி