பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

முதற்சான்றாக ஒரு குறளில் 'வான அறிவியல்’ புலனாக்கப்பெற்றுள்ளது.

"பிணியின்மை' என்று துவங்கும் குறளில் நாட்டிற்கு அணியாம் ஐந்துகொண்டு பதினான்கு அறிவியற் கருத்துக்கள் புலனாக்கப் பெற்றுள்ளன. இதற்கு 85 குறட்பாக்கள் முழுமையாகவும் தொடராகவும் எடுத்தாளப் பெற்றுள்ளன.

இந்நூல் ஒரு பொழிவின் எழுத்துருவம். சுருக்கமான பொழிவை விளக்கி நூலாக்கியுள்ளேன்.

1980-இல் இரத்தினகிரியில் நிகழ்ந்த திருக்குறள் பேரவை மாநாட்டிலும், 1993இல் திருத்துறைப்பூண்டியில் நிகழ்ந்த தமிழ்நாடு திருவள்ளுவர் திருமன்ற மாநாட்டிலும் 'திருக்குறளில் அறிவியல்' என்னும் தலைப்பில் உரை யாற்ற நேர்ந்தது. தமிழ்நாடு திருவள்ளுவர் திருமன்றத்தை நிறுவி இயக்கி வரும் திரு ப. முருகையன் அவர்கள் தன்னைத் திருவள்ளுவரடிமை ஆக்கிக் கொண்டவர். 'திருக்குறளில் அறிவியல்' உரையை எழுத்துருவாக்கித்தர வேண்டினார். எழுத்துருவ அமைப்பிற்கேற்ப ஆக்கினேன். ஆர்வமுடன் வெளியிடும் திரு முருகு அவர்களைப் பாராட்டி வாழ்த்தி நன்றி கூறுகின்றேன். அவர்தம் திருவள்ளுவப் பணிமாலையில் இந்நூல் ஒரு முத்து; திருவள்ளுவ முத்து: அறிவியல் முத்து.

என் நூல் மாலையில் ஒரு பொன்மணி.
அறிவியல் ஆக்கந் தரும்;
திருவள்ளுவப் பசியினர் பருகிச் சுவைக்கலாம்;
 புத்தகக் காதலர் புகுந்து பார்க்கலாம்;
அறிவியலார் அசைபோடலாம்.

வணங்கி அமைகின்றேன்.


கலைக்குடி
தஞ்சாவூர்-7

அன்பன்
கோவை. இளஞ்சேரன்