பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


என் அன்புக்குரியவன் எனது நெஞ்சத்திலேயே வாழ்கிறான். அதனால் தான் அவனை நான் எங்கும் காண்கிறேன். - கி.ஆ


கடலருகில் தோட்டத்தில், நெருங்கி வரும் கோடைக் காலத்தில் அன்பு மலருமாக. - கா.பா


பேரண்டத்தின் அடி ஆழத்திலிருந்து கிளம்பிடும் எதிரொலி நம்மிடம் அன்பு செலுத்துபவனின் முகத்திலிருந்து நமது நெஞ்சத்தில் எதிரொலிக்கிறது. - நினை


மிகச் சிறந்ததை நான் தேர்ந்தெடுக்க இயலாது. மிகச் சிறந்தது எதுவோ அது என்னைத் தேர்ந்தெடுக்கிறது. - ப.ப


தன்னைக் கடந்த வாழ்க்கையில்தான் மனிதன் உண்மையில் வாழ்கிறான். அறிந்திறாத ஆண்டைக்காக அவன் உழைக்கிறான், உலகில் பிறந்திராதவர்களுக்காக சேமித்து வைக்கிறான். - எ.எ


எவனொருவனின் பேச்சு தூய்மையாயிருக்கிறதோ, எவனொருவன் செருக்கையும், தற்பெருமையையும் விட்டொழித்திருக்கிறானோ அத்தகையவன் உண்மையான பெயரடைகிறான். - கா.ப