பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

23


ஒருவனுக்கு மட்டுமே வழங்குவதற்காக அளிக்கப் பட்டதில்லை, இந்த எனது நெஞ்சம். பலருக்கும் வாரி வழங்குவதற்காகவே ஏற்பட்டது அது.

- தோட்

உலகின் கடற்கரையில் எனது நெஞ்சத் துடிப்புகள் அலை மோதுகின்றன. அங்கே 'உன்னை நான் விரும்புகிறேன்' என்கிற சொற்களைக் கண்ணிரால் எழுதப் பட்டுக் கையெழுத்திடப்படுகிறது.

- ப. ப


மாலைப் பொழுதின் அரையிருள் நேரத்தில், அதிகாலைப் பறவை, அமைதியாகிற எனது கூட்டிற்கு வந்து சேர்கிறது. -

- ப. ப


அன்பாகிய பேரரசில் நமது ஆன்மா இடம் பெற்றுள்ளது என்பதை எவனொருவன் தன் வாழ்க்கை மூலம் மெய்பிக்கிறானோ, அவன்தான் நமக்கு உதவி செய்கிறான்.

எ. எ

காது கொடுத்து கேட்கும் மேலுலகிடம் பேசுவதற்கு நிலம் எடுத்துக் கொள்ளும் எண்ணற்ற முயற்சிகளே மரங்கள்.

- மின்