பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


ஓ, என் நெஞ்சமே, காதலி எங்கு வசிக்கிறாளோ, அந்த நாட்டுக்கு நாம் சென்றிடுவோம்.

一 க.பா

உனது நிழல் மாடி முகப்பைப் கடந்து செல்லும் வரை நான் காத்திருந்து கவனிப்பேன். நிறை மனத்தோடு திரும்பிடுவேன். -

க.கொ.

ஒ உலகமே, எனது இறப்பிற்குப்பின், உனது அமைதியில் எனக்காக "நான் விரும்பியிருக்கிறேன்" என்கிற சொல்லை நினைவில் இறுத்திக் கொள். முழு முகக்கண்ணாடியில், அழகி தன் முகத்தைப் பார்க்கும்போது, அழகே உண்மையின் புன்முறுவலாகக் காட்சியளிக்கிறது.

-மி.மி

என் அன்பே, வாழ்க்கை தோன்றுவதற்கு முன்னரே, எளிய கொந்தளிப்புடன் கூடிய உன் இரத்தத்துடன் இனிய கனவுகளாகிற ஏதாவதொரு அருவியின் அடியில் நீ நின்றிருந்தாய்

கா.ப

கடலில் கலக்கும் ஓர் ஆறு போல், ஒய்வு நேரத்தின் ஆழத்தில் உழைப்பு தனது நிறைவைக் காண்கிறது.

- மின்