பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

27


என் நெஞ்சத்தை இழந்துவிடும் அளவிற்கு அவள் நாவிலிருந்து இத்தகைய இசையை ஏன் நான் பறித்துக் கொள்ள வேண்டும்?

- மின்

அவன் நல்லவன், கெட்டிக்காரன் என்பதற்காக நான் அவனை விரும்பவில்லை. அவன்

என் குழந்தை என்பதற்காகத்தான் நான் அவனை விரும்புகிறேன்.

- வ.பி

தடைகள் யாவற்றையும் மீறி பாட்டிசைத்தவாறே ஆறு விரைவாகச் செல்கிறது.

ஆனால் மலையோ இருந்த இடத்தில் நின்று அவளை நினைவுபடுத்திக் கொள்கிறது; அன்பு மூலம் அவளைத் தொடர்கிறது.

- வ.பி

அன்பே, என்னை நீ விரும்புவதனால் எனது மகிழ்ச்சியை மன்னித்துவிடு. எனது செருக்கை மிதித்திடு;

- தோட்

தேடுதல்களைப் போன்று, மரங்கள் விண்ணக மண்ணகத்தை கண்ணோட்டமிடுவதற்காக குதிகால்களில் நிற்கின்றன.

- மின்