பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

31


நான் உழைக்கும்போது இறைவன் என்னை மதிக் கிறான். நான் பாடும்பொழுது அவன் என்னை விரும்புகிறான்.

- மின்

வாழ்க்கை நமக்கு அளிக்கப்படுகிறது. மற்றவருக்கு வழங்கியே நாம் அதை அடைகின்றோம்.

- ப.ப

கட்டுப்படுத்தும் அதே சமயம் அன்பு, விடுதலையும்

அளிக்கிறது, ஏனெனில் ஒன்று சேர்ப்பது தான் அன்பு.

-எ.எ

மலரும் ஒவ்வொரு செம்மலரும் என்றும் இளவேனிலை அளித்திருக்கும் செம்மலரிடமிருந்து எனக்குக்

கிடைக்கும் வாழ்த்துகள்.

- மின்

உண்மைக்கு அப்பாற்பட்டு எவனொருவனுடைய

புகழ்பளிச்சிடாமலிருக்கிறதோ அவனே பெருமைக்குரியவன்.

- ப.ப

அன்பு செலுத்துவதனால் நாம் அடையும் மகிழ்ச்சியே

இறுதியானது. ஏனெனில் அதுவே (அன்பு செலுத்துவதே) இறுதியான உண்மை.

- ப.ஓ