பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எதிர்ப்படல்


உலகமே, என் நெஞ்சு உன்னை அன்பால் முத்தமிடாதபொழுது, எனது ஒளியின் பெருமை முழு வதையும் நான் அறிய இயலாது போயிற்று; நீண்ட இரவு முழுதும் வானம் விளக்கை ஏந்தியவண்ணம் என்னைப் பாதுகாத்து வந்தது. தன் அன்புப் பாடலோடு என் நெஞ்சு உன்னை நெருங்கியது, கமுக்க உரைகளை நாம் பரிமாறிக் கொண்டோம் என் நெஞ்சம் உன் கழுத்தில் மாலையிட்டது. விண்மீன்களோடு நீ மதித்து வைத்துக் கொள்ளும்படியாக, அது ஏதோ ஒன்றை உனக்குத் தந்திருக்கிறது என்பதை நான் அறிவேன்.

-எ