பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

37


உனக்காக நான் பாடிய பாடல்களுக்காகப் பரி சொன்றும்’ கேட்கப் போவதில்லை நான். அவை இரவுமுழுவதும் வாழ்ந்திருந்தால் போதும், அதிலேயே எனக்கு மன

நிறைவு.

- நா

சீற்ற மின்னல் தன்னுடைய கூரிய நகங்களினால் வானத்தைக் கீறிக் கிழிக்கின்றது.

பப

மெய்யறிவு பெற்றுக் குழந்தைப் பருவத்தை மனிதன் திரும்பப் பெறுவதற்காக இறைவன் காத்திருக்கிறான்.

- பப

நட்புரிமையில் கனவுகளும் நனவுகளும் கைகோர்த்துக் கொள்ளுகிற அந்தப் பகுதியை அவள் அடைந்துவிட்டாள்.

-மு.மு

என்னுள்ளத்தில் வாழ்பவன் மட்டுமே நான் பதித்த உண்மையான வழியே என்னிடம் வர முடியும்.

- மு.மு

முழுமையான நோக்கைப் பெறத் தானாகவே நமக்குஉதவிட முன்வரும் உயிர்க்கருவியே நம்பிக்கை என்பது.ஆனால், நாம் காண்பது என்னவோ துண்டு துக்கடாக்களை மட்டிலுமே.

-எஎ