பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


பனித்துளி, தன்னுள் மிளிர்கின்ற ஒளிப்பொரியினின்றே சூரியனை மணங்குளிர அறிந்து கொள்கிறது.

-மி.மி

அன்புப் பெருக்கில் விளையும் செல்வம்தான் தூய்மை.

- ப.ப

உனது மூச்சுக் காற்றின் மூலம் மகிழ்ச்சி, துயரம் என்கிற பண்புகளாக நான் வெளிப்படுகிறேன்.

-படை

இடையூறு எதிர்ப்படும் பணிகளுக்கு என்னை அனுப்பி என்னைத் திடப்படுத்து.

-நா

மனிதனுடைய சிந்தனைகளைப் பேச்சாக உருப் பெறச் செய்வது இறையின் அமைதி.

- கா. ப

கரைக்குக் கரை நீ தொடரும் வாழ்க்கைப் பயணத் தில் என்னை நீ மீண்டும் மீண்டும் சந்திப்பாய்.

மின்

அழகு உண்மையின் புன்னகை. தனது அசல் முகத்தை குறையற்ற கண்ணாடியில் அவள் பார்க்கிறாள்.

- மின்