பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

41


நான் ஆசைப்படுவதை அடைந்திட இந்தப் பேரண்டம் முழுவதுமே எனக்கு உதவிக் கொண்டிருக்கிறது.

எ எ

****

காதல் என்பது ஒரு விளங்காத புதிர். ஏனெனில் விளக்கத்திற்கு அப்பாற்பட்டது அது.

- மின்

****

எனது வாழ்க்கை பயனற்றது என்கிற கொடிய வறுமையினால் கந்தல் கந்தலாகக் கிழி படாமலிருக்கட்டும்.

****

இறைவன் பொழியும் மழை நீர்போல், ஒரு தகப்பனின் அன்பு தீர்ப்பு வழங்குவதில்லை, மாறாக வற்றாத ஊற்றிலிருந்து பாய்ச்சப்படுகிறது.

- நா

****

விண்மீன்கள் ஒளிவீசும் தன் கோவிலில் குடி கொண்டுள்ள இறைவன் காத்திருப்பது தனக்கு விளக்கெடுத்துவரும் மனிதனுக்காகவே.

- மின்

****

காதல் எப்பொழுதுமே ஈகம் செய்வதற்கு அணியமாகஉள்ளது என்பது நடைமுறை உண்மை. ஆனால் அதை உண்மை என்று நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

-ப.ப

****