பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


நீ ஒருவனே விருந்தாளியாக விளங்கப்போகிற விழாக் கூடமே சிறப்பானது.

ஆகவே தான் உனக்கு விடுக்கப்படும் அழைப்பிதழ் விண்ணிலிருந்து விண்ணுக்கு எழுதப்படுகிறது. - -படை

ஒரு கணத்தில் ஓசை நிலையான இசையை ஏளனம் செய்கிறது. - -ப.ப

காதல் பெருக்கில் உன்னையே நீ என்னிடம் ஒப்படைக்கிறாய். பின்னர் என்னிடம் உன் இன்னமைதி அத்தனையையும் உணர்கிறாய். - -கீ

என்னால் கடவுளை நேசிக்கமுடிகிறது. ஏனெனில் மறுப்புக்கான உரிமையை அவன் எனக்கு அளிக்கிறான். - - மின்


என் வாழ்க்கையின் தந்திகள் யாவும் மீட்டப்படும் போது, என் தலைவனே, நீ என்னைத் தொடும் ஒவ்வொரு முறையும் அன்பின் இசை வெளிப்படுகிறது. - - ப.ப

விடுதலையே கடவுள், ஏனெனில் ஒளியும் அவனே. - -எ.எ