பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

45


எனது பாடல்களை உனது ஊமை நெஞ்சத்தில் பொழிகிறேன்; அதே போன்று, எனது அன்பையும் உனது அன்பில் பொழிகிறேன்.

- தோ

உன் கண்கள் கண்ட விருந்தாளியை உன் இல்லத்திற்குக் கொண்டு வராதே. உனது நெஞ்சத்தின் அழைப்பின் பேரில் அவன் உன் இல்லம் வரட்டும்.

-படை

மண், தண்ணீர் இவற்றின் நெஞ்சத்திலிருந்து பீறிடும் குரல் "நான் காதலிக்கிறேன், நான் காதலிக்கிறேன்" என்பதே.

- செம்

அமைதியாக இரு என் நெஞ்சமே, இந்த ஓங்கி உயர்ந்த மரங்கள் வேண்டுதல்கள் தாம்.

- ப.ப

மொட்டுக்களை மலரச் செய்வது உன் வேலையில்லை. மொட்டை உலுக்கிடு, உதிர்த்திடு. ஆனால் அதை மலரச் செய்வது உன் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது.

-க.கொ

என் மரத்தின் நிழல் வழிப்போக்கர்களுக்காக அதன் கனியோ, நான் காத்துக் கொண்டிருக்கும் அந்த ஒருவருக்காக.

- மின்