பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“இலங்கையில் பல இடங்களில் பத்தினித் தெய்வத்துக்குக் கோயில்கள் இருக்கின்றன. சிங்களவரும் அத்தெய்வத்தை வணங்குகிறார்கள். முக்கியமாக இலங்கையின் கிழக்குப் பகுதியாகிய மட்டக்களப்பில் கண்ணகி வழிபாடு அதிகம்."

"அப்படியானால் அவ்விடங்களில் உள்ள திருவுருவங்கள் எல்லாவற்றிலுமே இரண்டு நகில்கள் இருக்கின்றனவா?"

"ஆம்; ஒற்றை நகில் உடைய உருவம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை."

இப்படி நான் பேசிக் கொண்டிருந்தபோது என் மனம் தமிழ் நாட்டில் உள்ள திருச்செங்கோட்டுக்குப் போய் நின்றது. ரெயில் ஏறாமல், பஸ் ஏறாமல் போய்