பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

இலங்கைக் காட்சிகள்

"இது எங்கேயிருந்து கிடைத்தது?" என்று கேட்டேன்.

"கிழக்கு மாகாணத்தில் கண்டெடுத்த அழகிய திருவுருவம் ஒன்று உண்டு. அது இப்போது பிரிட்டிஷ் மியூசியத்தில் இருக்கிறது. அதன் மாதிரி இது; அதைப் போலவே இயற்றியது."

எனக்கு ஏதோ ஒருவகை உணர்ச்சி உண்டாயிற்று. அது கோபமா, துக்கமா, பொறாமையா இன்னதென்று சொல்ல முடியாது. மயிலாசனம், கண்டியரசன் சிங்காதனம், நடராஜ விக்கிரகம், கண்ணகியின் உருவம் எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டு இப்போது சிலவற்றை வாங்கியிருக்கிறோம். சிலவற்றுக்கு அசல் கிடைக்கவில்லை; நகல் தான் கிடைக்கிறது. பிறந்த இடத்தில் நகல்; வேறு எங்கேயோ அசல்! நம்முடைய நூற்றைம்பது ஆண்டு அடிமை வாழ்வில் கண்டது இது. இந்தத் திறத்தில் இலங்கையும் சரி, இந்தியாவும் சரி, சளைக்கவில்லை.

மனம் சிறிது வேதனைப்பட்டது. பிறகு, 'இப்போது நாம் சுதந்தர இந்தியன்; நாம் நிற்பது சுதந்தர இலங்கை' என்ற நினைவு வந்தது. கொஞ்சம் ஆறுதற் பெருமூச்சு விட்டேன்.