இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆரியத்தின் வைரி
சாதிகள் நான்குண் டாக்கிச்
சமத்துவக் கொள்கை நீக்கி
வேதியப் பிழைப்புக் கண்டார்
வீணர்கள் அவரின் போக்கை
ஆதியில் மாடு மேய்த்திங்
கடைந்தநாள் வரையில் ஆய்ந்து
போதிய சான்று காட்டிப்
புகன்றனர் ஈரோட் டண்ணல்!
பார்ப்பனர் பேச்சை நம்பிப்
பாழ்பட்ட தமிழ கத்தில்
சூத்திர ராக மக்கள்
துயர்ப்படும் தமிழகத்தில்
நாத்திக னென்றும் இந்த
நாயக்கன் துரோகி என்றும்
கூர்த்தறி யாதார் சொல்லக்
கொஞ்சமும் அஞ்ச வில்லை!