பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

ஆசிரியர் கூறுகிற கருத்துக்களையும் விளக்கங்களையும் கேட்கிற போது மட்டும், மாணவர்களின் திறமை வளர்நது விடுவதில்லை.

கேட்ட சொல் விளக்கத்திற்கேற்ப, செயல் இயக்கத்திற்கு உட்படுத்தினால் தான், அவர்களின் திறமை வளர்கிறது. அறிவு மிகுதி பெறுகிறது.

பொம்மையை ஆட்டுவிக்கும் போது அது அழகாக இருக்கிறது. மாணவர்களை செயல் இயக்கத்தில் ஈடுபடுத்தும் பொழுது, அவர்களின் எண்ணம் தெளிவாக இருக்கிறது. திறமை வலிவாக மாறுகிறது. தேர்ச்சியும் பல தவறுகளைக் கடந்து, எழுச்சி பெறுகிறது.

ஆகவே, ஆசிரியர், தனது திட்டங்களுடன், வடிவமைத்துள்ள செயலமைப்புகளுடன், மாணவர்களை செயல்பட உற்சாகப்படுத்தி, வழிகாட்டும் பணியில் கடமையைச் செய்கிறவராகிறார்.

அந்த வழிகாட்டும் பணியில், மாணவர்களது செயல்திறன், தொழில் முன்னேற்றம், திறமையின் நீரோட்டம் அனைத்தையும் அறிந்து கொள்ள, ஆசிரியரால் முடியும். ஆமாம் நிச்சயமாக முடிகிறது.

ஆகவே, ஆசிரியர்கள் என்பவர்கள், கற்பிக்கிற போது. வேலை வாங்கும் மேஸ்திரியாக இல்லாமல், வழி காட்டும் துணையாகவே விளங்குகிறார். வளம் கூட்டுகிறார் என்பதாக விளங்க வேண்டும்.

3. கற்பவரை முன்னேற்றுதல்

ஒவ்வொரு குழந்தையும் அதற்கென்று தனியான குண நலன்கள், கூடிவரும் திறன் வளங்கள் கொண்டவையாகவே திகழ்கிறது.