பக்கம்:கடவுள் பாட்டு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45



நீரும் நெருப்பும் நீயென்றார்
நிலமும் வானும் நீயென்றார்
ஆரும் காற்றும் நீயென்றார்
அம்பொற் கதிரும் நீயென்றார்
மாறும் மதியும் நீயென்றார்
மன்னும் உயிரும் நீயென்றார்
கூறு கூறாய் நீபடைத்த
கோலப் பொருள்கள் இவையன்றோ?  133

எல்லாங் கடந்த பொருளென்றே
எண்ணிக் கொண்டேன் நானுன்னை
எல்லாப் பொருளின் உள்ளேயும்
இருக்கும் உண்மை பின்னறிந்தேன்
எல்லாம் உன்றன் திருக்குறிப்பால்
இயங்கும் உண்மை உணர்கின்றேன்
எல்லாம் வல்ல பெருமானே
என்னுள் ளத்தும் உள்ளாயே.  134

செக்கச் சிவந்த திருவாயும்
சிறிய கரிய கண்மணியும்
ஒக்கப் பொருந்து செவ்விதழின்
ஊடே மின்னும் வெண்பல்லும்
மிக்கப் பெரிய தனமிரண்டும்
மெல்லி தென்னும் சிற்றிடையும்
தொக்க எழிலின் தோகையரைத்
தூயோய் மறுக்க அருள்புரிவாய்.  135

இருக்கும் வீட்டில் விளக்கேற்றி
இன்பந் தந்து நலம்பெறவும்
பிறக்கும் பிள்ளை குட்டிகளைப்
பேணி வளர்த்துக் காத்திடவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/47&oldid=1212476" இலிருந்து மீள்விக்கப்பட்டது