பக்கம்:கடவுள் பாட்டு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

இறைவன் வந்து தங்குவதற்காகத் நிலைப்படுத்தி வைத்தவர்களாகிறார்கள்.

போற்றிப் போற்றி இறைவனை எத்தனையோ பேர் பாடிவிட்டார்கள். பாடப்பாடப் புதுப்பொருள் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. எத்தனை பேர் பாடினாலும், ஒவ்வொன்றும் சுவை புதிதாய், பொருள் புதிதாய், முறை புதிதாய் இருப்பதையே காணுகிறோம். அப்படி வந்த வரிசையிலேதான் இந்த "கடவுள் பாட்டு" என்ற பாமாலை விளங்குகின்றது. இப்பாடல்கள், நேரில் இறைவனோடு பேசும் பாங்கில் கற்பனையாக எழுதப்பெற்றிருந்தாலும், இவை கற்பனை கடந்த ஒர் உண்மையான உணர்வின் வயப்பட்டு நின்ற உள்ளத்தின் பொழிவாகும்.

மனித அறிவுத்திறன் ஒன்றையே மதித்து, இறையுணர்வை மறுத்து நிற்பாரின் மயக்கினை யறுக்கவல்ல இப்பாடல்கள் படிப்பவர் உள்ளத்தைத் திருத்தும் பாங்கினவாம்.

மாணிக்கவாசகர் வள்ளலார் போன்ற அருட்பெருஞ்செல்வர்களின் அருளிச் செயல்களை யொத்த திருப்பாக்கள் இவை. இவற்றை நாள் தோறும் படிப்பவர் உள்ளத்திலே இறையுணர்வு பொங்கித் திருவருள் தங்கி நிற்கும்.

பாவலர் தாமரையான் இயற்றிய இத்தேனொழுகு பாடல்களைத் தமிழ் மக்கள் திருமுன் படைக்கின்றோம்! எல்லாம் வல்ல இறைவன் திருவருளால், தமிழ் மக்கள் சாதி சமய வேறுபாடுகள் ஒழிந்து, இறைவன் திருமுன் இவ்வுலக மக்கள் அனைவருமே ஒருநிகராக வாழ வேண்டுமென்னும் பொதுநிலை யெய்தி தத்தம் வாழ்வில் சிறப்புறுக என வாழ்த்துகிறோம்!

-தமிழாலயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/8&oldid=1201940" இலிருந்து மீள்விக்கப்பட்டது