பக்கம்:கரிகால் வளவன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

அவன் தோளில் வீரத்தின் செறிவு இருந்தது. அவன் பேச்சில் ஆண்மையின் அழுத்தம் இருந்தது.

“ஒருகால் காவிரிப்பூம்பட்டினத்துக்குத் தானாகப் போய்வரலா மென்று புறப்பட்டிருப்பானா? அன்று ஒரு நாள் அந்த நகரத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருப்பதாகச் சொன்னானே!” என்று தாய் கூறினாள்.

“இருக்கலாம். அங்கே போய்த் தேடுகிறேன். அநேகமாக அந்த நகரத்தில் இருக்கக் கூடுமென்றே தோன்றுகிறது” என்றார் புலவர்.

இதை அவர் மனப்பூர்வமாகச் சொல்லவில்லை. தாயின் வேதனையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தினால், அவள் கொண்ட ஐயத்தில் உண்மை இருப்பதாகக் காட்டினார். அவருக்கு அந்தச் சந்தேகமே இல்லை. இளவரசன் மிகவும் கூரிய அறிவுடையவன். யாரிடமும் சொல்லாமல் போகமாட்டான். இதை அவர் தெரிந்து கொண்டிருந்தார்.

“சரி, நான் போய் வருகிறேன். குழந்தையை அழைத்துக்கொண்டே வருவேன். நீ கவலையுறாமல் கடவுளின்மேல் பாரத்தைப் போட்டு இரு” என்று விடைபெற்றார் புலவர்.

“அண்ணா, நான் குழந்தையைக் காண்பேனா?” என்று அழுதாள் அவள். “நான் பாவி! குழந்தையைப் பக்கத்திலே இருக்கும்படி சொல்லாமற் போனேனே!” என்று புலம்பினாள்.

“அதையெல்லாம் இப்போது நினைத்துப் பயன் இல்லை. குழந்தை கிடைத்து விடுவான் என்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/25&oldid=1232466" இலிருந்து மீள்விக்கப்பட்டது