பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கலைக்கூடப் பகுதி

2. கம்பன் கழகம்

கம்பன் கழகம் இனியது-இன்றியமையாதது. கம்பன் கழகத்துள் புகின், கலைச் செல்வங்களை நிரம்பவும் பெற்று மகிழலாம். ஆங்குப் பல கலைகள் பயிலப்படும்ஆராயப்படும்-அறியப்பெறும்-இத்தகு கழகம் உள்ள நாடு பெருமைக்குரியது; நகரம் சிறப்பிற்குரியது. எனவே கம்பன் கழகம் இனியது-இன்றியமையாதது.

ஆனால், திருவள்ளுவர் தெரிவித்துள்ளார். 'கழகத்துள் புகக்கூடாது; புகின், பழகிய செல்வமும் பண்பும் கெடும். ஏழமை - மிகும்' இது வள்ளுவர் கூறும் கருத்து. ஆயின், கம்பர் அறிமுகப்படுத்தும் கழகம் இனியது. ஏற்றது-இன்றியமையாதது.

மயாறிந்த புலவரிலே:

இஃதென்ன முரண்பாடு! "யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர் போல்இளங்கோவைப் போல், பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை உண்மை வெறும் புகழ்ச்சியில்லை" எனச் சுப்பிரமணிய பாரதியாரால் பாராட்டப்பெற்றுள்ள பெரும்புலவர் மூவருள், கம்பர், கழ கத்தைச் சிறப்பித்துக் கூறுகிறார்; திருவள்ளுவரோ கழகத்துள் புகுதலைக் கண்டிக்கிறார்.

ஆம்! கம்பர் தமது இராமாயண நூலில் பால காண்டத்தில் நாட்டுப் படலத்தில் கோசல நாட்டின் சிறப்பைக் கூறி வருங்கால்