பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

அவரைப் பலவே அரசியல் துறையிலும் இலக்கியத் துறையிலும் பலர் மேடையில் பேசி வந்தனர். ஆனால், அண்ணா துரையவர்களின் பேச்சுக்குப் பெருங்கூட்டம் கூடிற்று. ஐம்பது கல் தொலைவிற்கு அப்பாலிருந்தெல்லாம் மக்கள் திரள் திரளாக வந்து குழுமினர். அண்ணாதுரையவர்கள் பேசும் வரையும் பெருங்கூட்டம் காத்திருக்கும். அவர் பேசி முடித்ததும் ஏறக் குறைய முக்கால் பங்கினர் எழுந்து போய் விடுவது வழக்கம். அதனால், அவரை,மற்றவர் எல்லாரும் பேசிய பின் இறுதியில் பேசச் செய்து வந்தனர். மேடைத் தமிழ் பற்றிய மக்களின் மனப்பாங்குக்கு இதனை ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

கொள்கையில் இரு வேறு துருவங்களான் பெரியார் ஈ.வே. இராமசாமியவர்கள், திருமுருக. கிருபானந்த வாரியார் அவர்கள் ஆகியோரின் பேச்சுக்கும் பெருங் கூட்டம் கூடும். இருவரது பேச்சுத் தமிழிலும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. இருப்பினும் இருவருக்கும் இரு வேறு வகையான பெருங்கூட்டம் உண்டு. இச்செய்தி மேடைத் தமிழ் பற்றிய மக்களின் மனப்பாங்கு மாறுதல் உடையது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

ஒவ்வொரு வகையான பேச்சு நடையை ஒவ்வொரு வகையினர் விரும்புகின்றனர் என்பது உண்மைதான் எனினும், பொதுவில், தரங் குறைந்த பேச்சு நடையையே பெரும்பாலார் இன்று விரும்புவதாகத் தெரிகிறது. இதற்குக் காரணம் மக்கள் அல்லர். தரங்குறைந்த நடையில் பேசிப் பேசி அதையே விரும்பிக் கேட்க மக்களைப் பழக்கிவிட்ட பேச்சாளர் சிலரே காரணமாவர்.

தரம் மிக்க தமிழ் நடையில் பேசுவதை விரும்பிக்கேட்க மக்களைத் தூண்டுவதைக் காட்டிலும், தரங்