பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

புலவர்கள் பலர், பிள்ளையவர்களின் பெரும் புலமையைப் பாராட்டிப் பாடல்கள் பல இயற்றியுள்ளனர். உள்ளுர்ப் புலவர் பெருமக்களின் பாராட்டுப் பாடல்களுக்கோ அளவே யில்லை. இதைக் கொண்டு, பெரியசாமிப் பிள்ளையின் பெரும்புலமையின் ஆழமும் அகலமும் உயரமும் புலப்படும். மகாவித்துவான் பெரியசாமிப்பிள்ளையின் மாணாக்கருள் ஒருவர் எனத் தம் பெயருக்கு முன்னால் பொறித் துக் கொள்வதை அன்று பலர் பெருமையாகக் கருதினார்கள் எனில், பிள்ளையவர்தம் பெருமபுலமையின் பரப்பளவு நன்கு புலனாகுமே!

புலமைப் பேராண்மை:

பெரியசாமியவர்கள் புலமைப் பேராண்மை உடைய வராக விளங்கினார். பிற புலவர்களின் பாடல்களில்படைப்புக்களில் குற்றங் கண்டவழி கடிந்துரைத்தார். தம் முடன் மோதியவருக்குத் தக்க பதிலடி தந்தார். ஒருமுறை இவர் சென்னை சென்றிருந்த போது, அங்கே ஒரு குறும்பர், ‘இவர்தான் மகா வித்துவானா? இவருக்கு இலக்கணத்தில் ஒரு மாத்திரையின் அளவு தெரியுமா? என்று கிண்டல் செய்தாராம். அதற்குப் பிள்ளையவர்கள், ஒரு மாத்திரை மட்டுமன்று; கால் மாத்திரை, அரை மாத்திரை, முக்கால் மாத்திரை ஆகியவாற்றின் அளவும் தெரியும்’ எனக் கூறி அவற்றை நன்கு விளக்கி அவரை வாயடைக்கச் செய்தாராம்.

பேராண்மையிடையே ஊராண்மை:

புலமைப் பேராண்மையுடைய பிள்ளையவர்கள், பிற புலவர்கள் தளர்ச்சியுற்றக்கால் அவர்கட்கு ஊராண்மை புரியும் அதாவது உதவி செய்யும் பேரிரக்கமும் உடையவராக விளங்கினார். ஒரு கால், புதுவைக் காசுக்கடைப்