பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆசிரியர் முன்னுரை


என் உள்ளத்தினின்றும் பல்வேறு நேரங்களில் எழுந்த எண்ண எழுச்சிகளை இருபத்தொரு தலைப்புகளில் ஆய்வுப் படைப்பாக இந்நூலில் வெளியிட்டுள்ளேன்.

உலகில் ஊனக் கண்ணால் காணும் காட்சிகளே மிகுதி; மனக் கண்ணால் பல்வேறு ஆய்வுக் கருத்துகளைக் காணும் காட்சி மிகவும் குறைவு. மனக் கண்ணால் கருத்துக் காட்சிகளைக் காணும் பயிற்சி இளைஞர்களிடையே ஏற்பட இந்தப் படைப்பு உதவலாம். எனவேதான், இந் நூலுக்குக் ‘கருத்துக் கண்காட்சி’ என்னும் பெயர் வழங்கப் பெற்றுள்ளது.

நூலுள் ஒரே கருத்து குறிப்பிட்ட பயன் கருதி இரு கட்டுரைகளில் இடம்பெற்றிருப்பதைப் பொறுத்தருள்க.

இந்நூலை வெளியிட ஒரளவு பொருள் உதவி புரிந்துள்ள புதுச்சேரி மாநில அரசுக்குத் தலைதாழ்த்தி நன்றி செலுத்துகிறேன்.

நன்முறையில் இந்நூலை அச்சிட்டு உதவிய அண்ணாமலை நகர், கே.பி.டி, அச்சகத்தார்க்கு எனது நன்றி உரியது. வணக்கம். .

3-5-1988

சுந்தர சண்முகன்