பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வழி காட்டி

வருக வருக! வணக்கம். கருத்துக் கண்காட்சி பார்க்க வேண்டுமா? சரி. இதோ நான் ஒரு வழி காட்டி (Guide) இருக்கிறேன்-வாருங்கள். நான் ஒவ்வொரு பகுதியாகக் காண்பிப்பேன். இந்தக் கண்காட்சி ஊனக் கண்ணால் பார்க்கும் காட்சியன்று; மனக் கண்ணால்-கருத்துக் கண்ணால் பார்க்கும் காட்சியாகும். இந்தக் கண்காட்சியில் இருபத்தொரு பகுதிகள் , (Stalls) உள்ளன. நாம் ஒவ்வொன்றாகக் காணலாம்:

இதுதான் முதல் பகுதி (Stall). இஃது ஒர் இயற்கைக் காட்சிப் பகுதியாகும். இதில், ஒரு தாமரைத் தடாகத்தில் சேவல் அன்னமும் பெடை அன்னமும் அளவளாவுவதை அறிந்து மகிழலாம்.

இது இரண்டாம் பகுதி. இது ஒரு கலைக் கூடப் பகுதி. இதில் மற்போர்ப் பயிற்சி, படைப் பயிற்சி, கல்விப் பயிற்சி முதலிய பயிற்சிகளைக் காணலாம்.

அடுத்தது மூன்றாம் பகுதி; இது மேடைப் பேச்சுப் பகுதி. மேடைப் பேச்சாளர் பலரை இங்கே பார்க்கலாம்.

புலவர் பகுதியாகிய இந்த நாலாம் பகுதியைப் பாருங்கள். இங்கே முதுபெரும் புலவர்-மகா வித்துவான் ஒருவர் உள்ளார். அவரைப் பற்றிய விவரங்களை ஈண்டு அறியலாம்.

இதுவா? இது மாதிரி நீதிமன்றப் பகுதி. ஒரு குழந்தையை ஈன்ற தாய் யாரென்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. இன்னார்தான் தாய் என்று ஒரு சிலரும், வேறொருவர் தாய் என்று வேறு சிலரும் வாதிடுகின்றனர். இந்தச்-