26
கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி
நேரில் எடுத்துக்கூறி அவர்களைத் துயிலுணர்த்துதல் மகளிர்க்கே இயல்பான செயலாகும்.
காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த
கலவி மடவீர் ! கழற்சென்னி
காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த
களப்போர் பாடத் திறமினோ[1]
[காஞ்சி-இடை அணி, காஞ்சிபுரம்; கலிங்கம்- உடை, கலிங்க நாடு; குலைந்த-நிலைபெயர்ந்து கிடந்த, அழிந்த.]
இலங்கை எறிந்த கருணா கரன்தன்
இகல்வெஞ் சிலையின் வலிகேட்பீர்
கலிங்கம் எறிந்த கருணா கரன்தன்
களப்போர் பாடத் திறமினோ.[2]
[இலங்கை எறிந்த கருணாகரன்-இராமன்; களப்போர்-கலிங்கக்களப்போர்.]
என்ற தாழிசைகளால் கலிங்க வெற்றியைப் பாடுதற்கே நகரத்து மகளிர் அழைக்கப்படுகின்றனர் என்பதை அறியலாம்.
வைகறையில்
திருப்பாவை திருவெம்பாவைகளில் இங்ஙனம் மகளிர் ஒருவரை யொருவர் எழுப்புதல் விடியற் காலையில் நடைபெறுதல் போலவே, கடைதிறப்பிலும் வைகறையிலேயே நடைபெறுகிறதாக சயங்கொண்டார் கூறுகிறார்.