பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



26

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


நேரில் எடுத்துக்கூறி அவர்களைத் துயிலுணர்த்துதல் மகளிர்க்கே இயல்பான செயலாகும்.

காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த
கலவி மடவீர் ! கழற்சென்னி
காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த
களப்போர் பாடத் திறமினோ[1]

[காஞ்சி-இடை அணி, காஞ்சிபுரம்; கலிங்கம்- உடை, கலிங்க நாடு; குலைந்த-நிலைபெயர்ந்து கிடந்த, அழிந்த.]


இலங்கை எறிந்த கருணா கரன்தன்
இகல்வெஞ் சிலையின் வலிகேட்பீர்
கலிங்கம் எறிந்த கருணா கரன்தன்
களப்போர் பாடத் திறமினோ.[2]

[இலங்கை எறிந்த கருணாகரன்-இராமன்; களப்போர்-கலிங்கக்களப்போர்.]

என்ற தாழிசைகளால் கலிங்க வெற்றியைப் பாடுதற்கே நகரத்து மகளிர் அழைக்கப்படுகின்றனர் என்பதை அறியலாம்.

வைகறையில்

திருப்பாவை திருவெம்பாவைகளில் இங்ஙனம் மகளிர் ஒருவரை யொருவர் எழுப்புதல் விடியற் காலையில் நடைபெறுதல் போலவே, கடைதிறப்பிலும் வைகறையிலேயே நடைபெறுகிறதாக சயங்கொண்டார் கூறுகிறார்.


  1. தாழிசை-63,
  2. தாழிசை-54.